உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, தன்னிடம் சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்குமாறு சிலர் தொலைபேசியில் பேரம் பேசியதாக புகார் அளித்தார்.இது குறித்து, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, 'யூ- டியூபர்' திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உட்பட எட்டு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, எம்எல்ஏவிடம் பேரம் வழக்கில் கைதான முக்கிய 5 பேரை சென்னை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த ரமேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் தொடர்புடைய சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் நபர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankaranarayanan
ஜூலை 09, 2026 18:39

ஆமாம் ஆமாம் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் சிங்கப்பூரில் மருத்துவ மனையிலிருந்துதான் உதயமாயிற்று என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன சிறப்பு அதிரடிப்படை சிங்கப்பூர் சென்று விசாரணை செய்தால் முழுதும் சாலை மார்க்கமாகவே வெளிவரும்


விருமாண்டி
ஜூலை 09, 2026 16:51

தானா கனியிற கனியை எதுக்கு தடியால அடிச்சி கனிய வைக்கணும் என்று பொறுமையாக இருப்பதற்கு சொல்வார்கள். தானா கவிழப் போற ஆட்சியை எதுக்கு லஞ்சம் கொடுத்து கவிழ வைக்கணும் என்று கேட்க வேண்டிய தருணம் இது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


duruvasar
ஜூலை 09, 2026 14:55

இவங்கல்லாம் +2 மார்க்க வெச்சு டாக்டருக்கு படிச்சவங்க போல தெரிகிறது.


baala
ஜூலை 10, 2026 10:32

நீட் தேர்வு வருவதற்க்கு முன்பு அப்படித்தானே இருந்தது. அதனால் என்ன நஷ்டம். அயோக்கியர்களாக, கேடுகெட்டவர்களாக மட்டும் மனிதன் மனிதன் இருக்க கூடாது. அரசியல் சாக்கடை அப்படியா இருக்கிறார்கள்?


duruvasar
ஜூலை 09, 2026 14:53

சிங்கப்பூர் என்ற பெயரை பார்த்ததும் எவருக்காவது கவிதையாயினி பெயர் ஞாபகத்திற்கு வந்தால் அதற்க்கு எந்த கம்பெனியும் பொறுப்பேற்காது .


வாய்மையே வெல்லும்
ஜூலை 09, 2026 20:54

உங்க உள்குத்து பெருச்சாளி பொந்துக்குள்ளேயும் போயிட்டு தேடும் போல இருக்கே. உமக்கு புலனாய்வு மூளை சாரே


Krishna
ஜூலை 09, 2026 14:43

Seems Politically Motivated Case Though All Parties are Pulling OtherParty MLAs


உண்மை கசக்கும்
ஜூலை 09, 2026 13:45

காவல்துறையிலும் நீதி துறையிலும் இரண்டு திராவிட கட்சியின் ஆயிரக்கணக்கான குண்டர்கள் இருக்கிறார்கள்.


Narasimhan
ஜூலை 09, 2026 13:20

அம்பு எய்தவனை விட்டுவிடுங்கள். மற்றவர்களை துன்புறுத்துங்கள்


Muralidharan Swaminathan
ஜூலை 09, 2026 12:49

அவ் வேலு சிங்கப்பூர் சென்ற மர்மம்


சாமி
ஜூலை 09, 2026 12:48

நல்ல டாக்டர் ஊசி போடுவாரு! கெட்ட டாக்டர் கிட்னி திருடுவாரு! இதுல வர்ர டாக்டர் இது ரெண்டுமேயில்லாம புதுசா ஒரு வேலைய பாத்து விட்ருப்பார் போலயே? ஏனுங்க ஆபிசர் இது டாக்டரோட நிக்குமா? இல்ல இன்ஜினியர்,சித்தாளு, கொத்தனாருன்னு கதை நீளுமா?


சாமி
ஜூலை 09, 2026 12:13

த.வெ.க அரசை கவிழ்க்க உள்ளூர் சதி என்று சொன்னவர்கள் இப்போது அதனை சிங்கப்பூர் வரை கொண்டு சென்று விட்டார்கள். விட்டால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாத்தையும் சேர்த்து கதையை நீட்டித்து விடுவார்கள் போல. காலக் கொடுமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை