உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  துரதிருஷ்டவசமாக தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டோம்

 துரதிருஷ்டவசமாக தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டோம்

திருச்சி: ''ம.தி.மு.க., வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டனர்,'' என, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள, முதல்வர் விஜய், சென்னையில் இருந்து திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வரவேற்றார். பின், துரை அளித்த பேட்டி: - தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், வழக்கு போடுவது, கைது நடவடிக்கை போன்றவற்றில் எவ்வித தாமதமும் இல்லை. தி.மு.க., ஆட்சியிலும் கடன் சுமை இருந்தது. அதனால் தான், நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான், மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தினர். இந்த அரசும், சில வாக்குறுதிகளை அளித்துள்ளது. காலப்போக்கில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பது என் கருத்து. சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால், இன்று, தமிழக வெற்றிக் கழகத்திற்க்கு ஆதரவு கொடுக்கும் சூழல் இல்லை. தற்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். அது, கட்சித் தாவல் சட்டத்துக்குள்ளும் வராது; குதிரை பேரத்துக்குள்ளும் வராது. அந்த இயக்கத்தின் நிலைப்பாட்டிலும், தலைமை மீது திருப்தி இல்லாததாலும், பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த, 2006ல், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த கம்பம் ராமகிருஷ்ணன், பதவியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க.,வில் இணைந்து எம்.எல்.ஏ.,வானார். அ.தி.மு.க.,வில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், 2009ல் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க.,வில் இணைந்து போட்டியிட்டார். குற்றச்சாட்டு வைக்கும் இயக்கத்தினர், கடந்த காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லையா? எனவே, கண்ணாடி கூண்டில் இருந்து கொண்டு, அடுத்தவர்கள் மீது கல்லெறியக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

baala
ஜூன் 04, 2026 10:21

இல்லை என்றால் தனியாக நின்று அறுத்து எடுத்து இருப்பீர்கள்.


Sivagiri
ஜூன் 02, 2026 11:08

சிஎம் சார் , தமிழ் தெரிந்த தெலுங்கர்களை , அவர்கள் இந்தப் பக்கம் இருந்தாலும் , , அந்தப்பக்கம் இருந்தாலும் , இந்தப் பக்கம் இருந்தாலும் , பத்து அடி தள்ளியே வைப்பது , அவருக்கும் நல்லது , கட்சிக்கும் நல்லது , தமிழ்நாட்டுக்கும் நல்லது . . . எப்போதும் ஆபத்துதான் , தலை எது வால் எது என்று கணிக்க முடியாத மண்ணூழிகள் . ..


Natchimuthu Chithiraisamy
ஜூன் 02, 2026 13:50

விஜய் அப்பா தமிழை தமிழ் நாடு வந்து தான் கற்றேன் என்று சொல்லுகிறார்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 02, 2026 11:08

துரதிர்ஷ்டவசமாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். துரதிர்ஷ்டவசமாக சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது சொந்த சின்னத்தில் நிற்காமல் வாடகை சின்னத்தில் நிற்பதற்கு வெட்கம் மானம் சூடு சொரணை பற்றியும் பேசிவிட்டோம்


duruvasar
ஜூன் 02, 2026 09:27

பயணித்தாலும் கரைக்கு வந்தவுடன் டீ சாப்பிட்டு, சிகரெட் ஊத கடையை நோக்கி ஓடுவது இயல்பானதுதான். அதிலும் சுயமரியாதை தெலுங்கர்களை பற்றி கேட்கவே வேண்டாம்.


raja
ஜூன் 02, 2026 08:48

அப்போ கட்டுமரத்துக்கு சத்தியம் செய்து கொடுத்தேன்னு சொன்னீங்க


VENKATASUBRAMANIAN
ஜூன் 02, 2026 08:17

விஜய் இவர்களை மட்டும் நம்பக்கூடாது. வைகோ முற்றிலும் நம்பகத்தன்மை அற்றவர்.


Rajarajan
ஜூன் 02, 2026 06:39

தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டிங்க. சொன்னதை நிறைவேத்தலையே ? நான் சொந்த சின்னத்தை பற்றி சொன்னேன். சரி, வண்டி தடம் மாறுது. இனி திராவிடம், பெரியார், சமூகநீதி இதெல்லாம் வேலைக்காகாதுனு, ஒவ்வொருத்தரா கடையை காலி பண்ணிட்டு, த.வெ.க. கடையில கூட்டணி போட போறீங்க. இதில் தன்மானம், சுய மரியாதை அப்படி இப்படினு பேசறதெல்லாம், வெறும் கம்பி கட்டும் கதை தானே.


முக்கிய வீடியோ