உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்: இபிஎஸ் கிண்டல்

அப்பா, அம்மா என்ற பெயர்களை மாற்றி விடாதீர்கள் ஸ்டாலின்: இபிஎஸ் கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்செங்கோடு : ''அம்மா, அப்பா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள், ஸ்டாலின்,''என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்தெரிவித்துள்ளார்.சட்டசபை தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து, மைதானத்தில், அவரது பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. கரட்டுப்பாளையம் பகுதியில் அவர் பேசியதாவது:இந்த பிரசார கூட்டம், மழை வந்ததால் முதல் முறையும், துயர நிகழ்வின் காரணமாக இரண்டாவது முறையும் தள்ளிப்போனது. தற்போது, நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் நடக்கும் முதல் கூட்டமே வெற்றிகரமாக அமைந்துவிட்டது. கரூரில், வேண்டுமென்றே திட்டமிட்டு, அந்த கூட்டம் சரியான முறையில் நடைபெற கூடாது என்பதற்காக பிரச்னை உருவாக்கப்பட்டதாக தகவல்.அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என, ஸ்டாலின் கூறி வருகிறார். திருச்செங்கோடு தொகுதியில் மட்டும், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை.இனிமேல், மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, 1621 கோடி ரூபாயில், கோவையில் 10 கி.மீ., நீளமான பாலம் அமைக்க திட்டமிட்டு, 55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. அதை கிடப்பில் போட்டு விட்டு, இப்போது திறக்கிறார். நாம் பெற்ற பிள்ளைக்கு, அவர் பெயர் வைக்கிறார். எங்கு பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார். இந்தியாவிலேயே, சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்று அவரே சொல்கிறார். ஆனால், எதில் சூப்பர் முதல்வர்? பொய் பேசுவதில், கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர். இவ்வாறு அவர் பேசினார்.

இபிஎஸ் குமாரபாளையம் பிரசாரம்

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் இன்று திருச்செங்கோடு தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட சானார்பாளையம், குமாரபாளையம் மெயின் ரோடு திறந்த வெளி மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசினார்.குமாரபாளையம் பகுதியில் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பில்லை, வறுமையால் உடல் உறுப்பை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.கரூரில் 41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது. இதில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்.

உங்க வீட்டில் இப்படி நடந்தால்...

கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விபட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா?இவர் வீட்டில் இப்படி சம்பவம் நடைபெற்றால் இப்படித்தான் வெளிநாடு போவாரா? ஏதோ சந்தடி சாக்குல ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். இப்போது, நீங்கதானே பொறுப்பு, அதை தட்டிக்கழித்து சுற்றுலா போகிறீர்கள் என்றால் மக்கள் மீது அக்கறை உள்ளதா? இப்படிப்பட்டவர்களுக்கு தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

உள்நோக்கம்

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இப்படி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா?அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள். அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை.

ஓட்டை உடைசல் பஸ்

எடப்பாடி பழனிசாமி ஒரு பஸ் எடுத்துகிட்டு ஊர் ஊராகப் போகிறார், எங்க பிங்க் கலர் பஸ்ஸை எடுத்துக்கிட்டு அதை சைடு வாங்கிட்டு போயிருவோம் என்று உதயநிதி பேசினார். பிங்க் கலர் பஸ் ஓட்டை உடைசல் பஸ்ஸாகவே இருக்கிறது. மழை காலத்தில் குடையை புடிச்சிகிட்டுத்தான் பஸ்ஸில் போகவேண்டும். இன்று படிக்கட்டு கழன்றுவிட்டது, டயர் ஒரு பக்கம் கழன்றுகொண்டுபோகுது. இப்படி ஒரு மோசமான பிங்க் பஸ் கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது. 2026 அல்ல 2031 ல் கூட எங்க பஸ்ஸை பிடிக்க முடியாது. இது கண்டிஷனான பஸ், மக்கள் ஆதரவு பெற்ற பஸ்.மக்களின் பிரச்னையை தீர்க்கத்தான் முதல்வர், ஆனால் மக்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இதற்காக இவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பாலாஜி
அக் 09, 2025 08:05

"சின்னம்மா" என்ற பெயர் எடப்பாடி பழனிசாமியின் அடிவருடி அடையாளம்.


Kasimani Baskaran
அக் 09, 2025 04:20

கலைஞர் என்பது ஆர்ட்டிஸ்ட் - தனிப்பட்ட நபரின் பெயர் அல்ல என்று திராவிட உருட்டு உருட்டினால் எசப்படி என்ன செய்ய முடியும்.


Senthoora
அக் 09, 2025 07:02

சந்தோசம் இன்னைக்கு திரவைடனை உருட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே, நிம்மதியா தூங்கலாம்,


மணிமுருகன்
அக் 08, 2025 23:20

அருமை


Rajah
அக் 08, 2025 22:29

இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து திமுகவினர் விஜய்–க்கு குழி பறிக்கப் போய் குழியில் இருந்து பூதம் வந்த கதையாக நிலைமை மாறி விட்டது. எந்தக் கட்சியினரும் தனது தொண்டர்களை கொல்வதற்கு விரும்ப மாட்டார்கள் என்று சொன்னதோடு நிறுத்தியிருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது. மாறாக தனது கருவிகளான திருமா போன்றவர்களை விஜய்க்கு எதிராக பேச வைத்ததால் இன்று விஜய்யின் கொடிகள் எடப்பாடியார் கூட்டத்தில் பறக்கின்றது. விஜய் நிரூபிக்க வேண்டியதை அதிமுகவும் பாஜகவும் அவருக்காக செய்கின்றது. அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்கலாம் என்ற விஜய்யின் மௌனத்திற்கு வெற்றியும் கிடைத்திருக்கின்றது. திமுகவோடு விஜய் இணைந்தால் வெற்றி நிச்சயம். இதுதான் இன்றைய கள எதார்த்தம்.


வரதராஜன்
அக் 08, 2025 22:12

எடப்பாடி நீங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்திருந்தால் நீங்க இந்த தவறுகளை சுட்டிக் காட்டலாம் நீங்க துரோகத்தால் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் உங்களுக்கு எந்த தார்மீக அருகதையும் கிடையாது உங்க துரோகம் வரலாற்றில் பொறிக்கப்பட்டது.


varatharajan
அக் 08, 2025 22:05

ஐயா நீங்க என்ன பண்ணுவீங்க .உங்களோட சொத்துபத்துக்கள் எல்லாம் காப்பாத்தணும்னு எங்க போய் சேரனுமோ அங்க சேர்ந்து இருக்கீங்க என்ன பேசுறீங்கன்னு உங்களுக்கே தெரியுதா. நல்லா தெரிஞ்சு பேசுங்க தப்பு யார் மேல இருந்தாலும் நீங்க சொல்றதெல்லாம் போய் ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடியே போய் சேரனும். பழமொழி சொல்லுவாங்க பாருங்க யோக்கியன் வர்றான் சொம்ப தூக்கி உள்ள வையுங்க அது மாதிரி இருக்கு நீங்க சொல்றது .


varatharajan
அக் 08, 2025 22:03

அன்பர் சொன்ன மாதிரி கரூர் சம்பவத்துக்கு உங்க கிட்ட ஆதாரங்கள் இருந்தால் எங்கே வேணாலும் கொண்டு போய் கொடுங்க அதுக்கு எதுக்கு இவ்வளவு அலப்பறை பண்றீங்க.


sampath, k
அக் 08, 2025 21:37

This matter is under hearing in three courts. Toll such time, he is unnecessary commenting on this issue. He himself appear in the court and clarify his doubts


Ilamurugan Manickam
அக் 08, 2025 21:20

EPS is talking all nonsense since he do not have knowledge about anything ,simply bluffing .He is a spineless stupid


திகழ்ஓவியன்
அக் 08, 2025 21:12

அய்யா நீங்கள் முன்னாள் முதல்வர் , நீங்கள் வெளியே வீரமாக பேசுவதை விட்டு உங்களிடம் உள்ள ஆதாரங்களை கொண்டு நீங்கள் கோர்ட்டில் கொடுக்கலாமே இல்லை ஆணையத்திடம் கொடுக்கலாமே அப்படி விட்டு தெருவில் கதறி கொண்டு இருக்குறீங்க , actual ஆஹ் உங்கள் கட்சியை முடக்கி இருக்கனும் , ஏன் எனில் உங்கள் கட்சி தலைவியே ACCUST 1 என்று தீர்ப்பு வந்து விட்டது ஆகவே உங்கள் கட்சியை கலைத்து இருக்கனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை