உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் நாம் குறி வைக்கப்படுகிறோம்: திருமாவுக்கு ஆதங்கம்

இன்னும் நாம் குறி வைக்கப்படுகிறோம்: திருமாவுக்கு ஆதங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தவெக அரசில் இடம்பெற்றிருந்த நிலையிலும் மிகக்கடுமையாக இழிவாக விமர்சித்து வருகின்றனர். இன்னும் நாம் குறிவைக்கப்படுகிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: அனைத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். பல மடங்கு வீரியத்துடன் களமாட தேவையிருக்கிறது. இதனால் தான் திமுக கூட்டணியில் இருந்த போது கொச்சைப்படுத்தியவர்கள், இன்றைக்கு தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த நிலையிலும் மிகக்கடுமையாக இழிவாக, விமர்சித்து வருகிறார்கள்.நாம் இன்னும் குறிவைக்கப்படுகிறோம் என்பது தான் இதன் பொருள். நம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.இதை எல்லாம் கருத்தில் கொண்டு நாம் காய்களை நகர்த்த வேண்டும். நம்முடைய களம் வேறு எவராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத களம். வேறு எவராலும் நம்மை அப்புறப்படுத்திவிட முடியாத களம். வேறு யாரும் நம்மோடு போட்டி போட முடியாத களம் என்பதை பல முறை சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன்.இன்று தலைகீழாக மாறியிருக்கும் அரசியல் சூழலில், நாம் மீண்டும் மீண்டும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவே களமாடி வருகிறோம். தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக செயலாற்றி வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Sanjit
ஜூன் 27, 2026 06:31

he and his persons should be avoided from politics. roadla oruthar mela vandiya vittu aichuttu avar mela vaitha vimarsanam yavalo kevalamana manithan nee nu puriyaya vaithathu


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2026 23:07

ஆப்பிரிக்காவில் உள்ள பலநாடுகள், அமெரிக்கா தங்களை குறிவைப்பதாக புலம்பிக்கொண்டிருக்கின்றன. முதலில் குறிவைக்கும் அளவிற்கு தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். முளைச்சு மூணு இல்லை விடலை, வெறும் ரெண்டு சீட் வைச்சுக்கிட்டு பண்ற அளப்பறையை தாங்க முடியல சாமி என்று ஜோசப் விஜய் புலம்புகிறார்.


kjpkh
ஜூன் 26, 2026 22:36

முதலில் அரைத்த மாவை அரைக்காமல் உளராமல் தெளிவாக பேசுங்கள்.தவெக ஆட்சி அமைக்க ஸ்டாலின் தான் எங்களை அனுப்பி வைத்தார் என்றும் சொல்கிறீர்கள். திமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது பற்றி ஒரு தெளிவான முடிவே இல்லை. எல்லா பேட்டிகளும் கமலஹாசன் சொல்வது போலவே இருக்கிறது. உங்களுடைய அறிக்கை பேட்டி இவைகளைப் படித்தால் எரிச்சல் தான் வருகிறது.


sankaranarayanan
ஜூன் 26, 2026 22:16

சோபா சேட்டு வாங்கி வாங்கி திராவிட கட்சிகளுக்கு தாளம் போட்ட ஆசாமி இவர் இப்போது இப்படி செசறாரு என்னத்தே சோல்ரது இனி இவரு தனியாக போனதால் இவருக்கு மவுசு கூடப்போவதாக காணல் நீர் கனவு காண்கிறார் இதற்கு தலை கீழாக இனி இவர் இருக்கும் இடமே தெரியாமல் போகப்போகிறது


Venkatesh
ஜூன் 26, 2026 22:08

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பேச முடிகிறதே...... அடுத்த தேர்தலுக்குள் ஓரங்கட்டப்பட்டு .......


வன்னி சிரசு,
ஜூன் 26, 2026 21:48

இவர் பதவிக்காக கைக்கூலி.


ஆகுயர்தான்
ஜூன் 26, 2026 21:47

சாதி வெறி அரசியல், கட்ட பஞ்சாயத்து பார்ட்டி. இன்னுமா வெளியே விட்டு வைத்து இருக்கிறார்கள்? உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வக்கீலை கொல்ல துணிந்தார். குண்டர் சட்டத்தில் 15 ஆண்டுகள் கொடும் சிறையில் அடைக்க வேண்டும்


M Kannan
ஜூன் 26, 2026 21:29

நாகரிகம் இல்லாத, நேர்மை இல்லாத அரசியல் நடத்தினால் அவ்வாறு தான் நடக்கும்.


B N VISWANATHAN
ஜூன் 26, 2026 20:48

மற்ற அரசியல் தலைவர்களக்கு ஆயிரம் கவலைகள் இருக்கு. நீங்க வலுவாக இருந்தால் என்ன பலவீனம் ஆனா என்ன, அவங்களுக்கு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை. பேசாம இருக்கிறது வைச்சு சந்தோஷம் ஆ இருங்க.


KRISHNAN R
ஜூன் 26, 2026 20:28

கொஞ்சம் நஞ்சமா ,,,, ஆட்டம்