உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டின் வலிமையை எதிரிக்கு காட்டிவிட்டோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

நாட்டின் வலிமையை எதிரிக்கு காட்டிவிட்டோம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நமது நாட்டின் வலிமையை பதிலடி மூலம் எதிரிக்கு காட்டியது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.டில்லியில் நடந்த பாதுகாப்பு துறை தொடர்பான நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: 26 பேரைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா மே 7ம் தேதி ஆப்பரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நமது நாட்டின் வலிமையை பதிலடி மூலம் எதிரிக்கு காட்டியது. இந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதில் தீவிரமாக பாதுகாப்பு படை பணியாற்றி தனது தைரியத்தை நிரூபித்துள்ளது. வெற்றி நமக்கு பழக்கமாகிவிட்டது. இதனை நாம் தொடர்ந்து எப்போதும் செய்ய வேண்டும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க அரசாங்கம் உறுதியாக இருந்தது. அந்த சம்பவம் நம் நினைவுக்கு வரும்போதெல்லாம். நம் இதயம் கனமாகிறது. அந்த சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியது. இந்த முறை பயங்கரவாதிகளுக்கு அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு பாடம் கற்பிக்கப்படும் என்று நமது பிரதமர் உறுதியாக இருந்தார். இந்த தாக்குதல்கள் நான்கு நாட்கள் தீவிர மோதல்களைத் தூண்டின. இந்தியர்களாகிய நம் சிறப்பு என்னவென்றால், சவால்களை கண்டு நாம் எப்போதும் பின்வாங்கியது இல்லை. நாங்கள் கடினமாக உழைத்து பதிலடி கொடுத்தோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சுபாஷ்
செப் 20, 2025 08:31

தம்பட்டம் போரடிக்குது....ஆனா பேசறதுக்கு வேற விஷயமே இல்லியே


naranam
செப் 20, 2025 06:09

போதும் இந்த சுய புராணம். இன்னும் எத்தனை நாள் தான் இதை பற்றியே தற்பெருமை பேசிக்கொண்டிருப்பது? சவுதி பாகிஸ்தான் அணு ஆயுதக் கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. ராணுவ அமைச்சர் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். மெத்தனமாக இருப்பது இந்தியாவை இசுலாமிய நாடுகள் துண்டாடி விடும்.


முதல் தமிழன்
செப் 19, 2025 17:36

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடருது. பிஹார் தேர்தல் வரை சிந்தூர் அப்புறம் மற்ற தேர்தல் வரும்போது வேறு ஒரு பெயரில் ஆபரேஷன். ஆனால் அந்த 26 பெயர் ஆன்மா என்ன ஆனது. கடவுளுக்கு பொறுக்காது தீவிரவாதிகள் திமிர். ஆபரேஷன் தொடரும். ஜெய் ஹிந்த்.


MARUTHU PANDIAR
செப் 19, 2025 17:07

இந்தியாவையும் நேபாளம் வங்க தே சம் போல் ஆட்சிக்கு கவிழ்ப்புக்கு இட்டுச் செல்ல மும்முரமாக முயலும் இத்தாலி மாபியாக்கள், சிவப்பு தொப்பி, மே .வங்க ரோஹிங்கிய அரசி,தென்னகத்தின் மூர்க்க அடிமை பிரிவினை வாத வெள்ளை வேட்டிகள் இவர்களை வெல்வது தான் இப்போ டாப் முன்னுரிமை. இல்லையேல் ஈயை அடிக்க ஒவ்வொரு வாட்டியும் கொட்டாப்புளிய எடுத்தா கட்டுப்படி ஆகுமா?


Vasan
செப் 19, 2025 15:35

பாகிஸ்தானை வென்றால் போதாது. தமிழ்நாட்டை வென்று காட்டுங்கள். இன்னும் 7 மாத காலம் இருக்கிறது.


Prasanna Krishnan R
செப் 19, 2025 17:21

Dai Vasan, your CM will definitely lose, you lose.


Vasan
செப் 19, 2025 18:31

பிரசன்ன கிருஷ்ணா, நான் கூறுவது என்னவென்றால் தமிழ்நாட்டிலும் வெற்றி வாகை சூட்டுங்கள் என்று. அண்டை நாட்டு எதிரி மட்டுமல்ல, உள்ளூர் எதிரியையும் சேர்த்து தான்.


சமீபத்திய செய்தி