உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!

ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!

புதுடில்லி: வரும் 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை ஏவும் நிலையை நாம் அடைய வேண்டும் என பிரதமர் மோடி, விண்வெளித்துறைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.டில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: உங்கள் அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களிடையே உற்சாகத்தையை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்க இஸ்ரோ சவால் நிறைந்த பல முயற்சிகளை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

50 ராக்கெட்டுகள்

இன்று விண்வெளி தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நான் கேட்க விரும்புகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ஐந்து சிறப்பு வாய்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க முடியுமா? இப்போது இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 ஏவுதல்கள் நடக்கிறது. இந்த ஏவுதலில் தனியார் துறையின் பங்கு இருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நாம் ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவக் கூடிய நிலையை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

புதிய மைல்கற்கள்

ஒவ்வொரு வாரமும் ஒரு ராக்கெட்டை நாம் ஏவ வேண்டும். இன்று, விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. விண்வெளித் துறையில் தொடர்ந்து புதிய மைல்கற்களை அடைவது இந்தியா மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் இயல்பாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சந்திரனின் தென் துருவத்தை அடைந்து வரலாற்றைப் படைத்த முதல் நாடாக இந்தியா மாறியது.3 நாட்களுக்கு முன்பு, நான் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சந்தித்தேன்.

மூவர்ணக்கொடி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தினார். அவர் எனக்கு மூவர்ணக் கொடியை போது ஏற்பட்டதை மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்தியாவின் விண்வெளி வீரர் குழுவையும் நாங்கள் தயார் செய்யப் போகிறோம். இன்று விண்வெளி தினத்தன்று, இந்தியாவின் கனவுகளுக்கு சிறகுகளை வழங்க இந்த விண்வெளி வீரர் குழுவில் சேருமாறு எனது இளைஞர்களை அழைக்கிறேன். தொழில்நுட்பங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில், உங்கள் அனைத்து விஞ்ஞானிகளின் கடின உழைப்பால், இந்தியாவும் வரும் காலங்களில், சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும். கடந்த 11 ஆண்டுகளில், நாடு விண்வெளித் துறையில் பெரிய சீர்திருத்தங்களை கண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Khalil
ஆக 23, 2025 20:16

அந்த ரொக்கெட்ல உக்காந்து கெளம்பிடுங்க நாட்டுக்கு ரொம்ப நல்லது


Sekar
ஆக 23, 2025 18:14

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பரவலாக தொழில் நுட்ப வளர்ச்சி, புதிய கட்டுமானங்கள், போக்குவரத்து, ராணுவ தளவாட உற்பத்தி என குறிப்பிட தகுந்த அளவில் சிறப்பாக மேம்பட்டிருக்கிறோம் என்றாலும் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் மிக பெரிய தொழில், தொழில் நுட்பம் வளர்ச்சி மற்றும் பசுமை புரட்சியை ஏற்படுத்தி நாட்டை மேம்படுத்த துரிதமாக வழி வகை செய்ய வேண்டும். நாம் வெளிநாடுகளில் வேலை தேடி போகும் நிலை மாறி அனைத்து வகையிலும் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கான கல்வியை அனைத்து மாணாக்கர்களும் பெறும் வண்ணம் இருக்க வேண்டும்.


Vasan
ஆக 23, 2025 17:40

For our prime ministers dream to come true, Government should extend the crackers time on Deepavali day, which is celebrated one day per year. Within the few hours, it is difficult to send 50 rockets. Also Govt should ensure that rockets are available to public at cheaper prices by giving subsidy or by selling through ration shops, by direct selling scheme.


vivek
ஆக 23, 2025 15:42

இந்த கருத்தில் திரியும் இரண்டு கால் பிராணிகளையும் பிடித்து கொண்டு போக வேண்டும்


Ramesh Sargam
ஆக 23, 2025 12:57

இந்தியா விண்ணிலும் சாதிக்கவேண்டும். அதேபோல் மண்ணிலும் சாதிக்கவேண்டும். அதாவது விவசாயத்தை பெருக்கி இந்தியா உணவுப்பொருட்கள் உட்பதியில் தன்னிறைவு அடையவேண்டும். வாழ்த்துக்கள்.


Tamilan
ஆக 23, 2025 12:45

ராக்கெட்டுகள்தான் இருக்கும். மனிதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வருடமெல்லாம் இந்துமதத்தை தேட பல கதை கட்டுக்கதைகளை திரட்டிக்கொண்டிருக்கும் திருடிக்கொண்டிருக்கும் திரித்துக்கொண்டிருக்கும் நிலை தான் மீண்டும் வரும் .


புதிய வீடியோ