உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூகுளிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கூகுளிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எதுவாக இருந்தாலும் கூகுள், ஏஐ.,யிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிட கூடாது. தொழில்நுட்பத்திற்கு, மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்த வேண்டும்'' என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆசிரியர்கள் பணிக்கு வந்து இருக்க கூடிய 2 ஆயிரத்து 715 பேரையும் தமிழக முதல்வராக, தமிழக பெற்றோர் சார்பாக வரவேற்கிறேன். என்னை பொறுத்தவரை முதல்வர் என்பதால் சில ஆலோசனைகளை சொல்கிறேன்.

அனுபவம்

ஆசிரியர் என்பவர் பாடப்புத்தக பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல; அனுபவத்தை எடுத்துரைத்து மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது நினைவில் கொள்ள வேண்டியது, உங்கள் முன்னாடி உட்கார்ந்து இருப்பவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய மாணவர்கள் மட்டுமல்ல, எதிர்கால டாக்டர்கள், இன்ஜினியர்கள், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற அரசியல் தலைவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தூண்கள்

நாட்டின் எதிர்கால தூண்களுக்கு நாம் சொல்லி கொடுக்க போகிறோம் என்ற பொறுப்புணர்வு தான் உங்க கிட்ட மேலோங்கி இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் மாணவர்கள் இருந்து கல்வியை கற்று சமூகத்தை உள்வாங்கி பெற்று இருக்கும் அனுபவத்தை அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்று கொடுத்து ஒளியேற்றி வைக்க போகிறீர்கள். இன்றைக்கு இருக்கும் நாம் காலக்கட்டத்தில் பாடம் எடுப்பது எளிதாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.

கூகுள், ஏஐ.,

அறிவியல், வரலாறு, கணிதம் தொடங்கி எந்த பாடம் ஆக இருந்தாலும் அதனுடைய ஆழத்தை எளிதாக கற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புகள் உருவாகிவிட்டது. இதில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சரியான பாதையை காட்டி கொடுக்க வேண்டும்.எதுவாக இருந்தாலும் கூகுள், ஏஐ.,யிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிட கூடாது.தொழில்நுட்பத்திற்கு, மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்த வேண்டும். அறத்தின் வலிமையையும், நேர்மையின் தேவையையும் நீங்கள் தான் மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

போர் அடிக்க...!

மாணவர்களுக்கு பாடம் புத்தகங்களை கடந்து இலக்கியங்களை, பொது அறிவு தகவல்களை, சமூக ஒழுக்கத்தை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை, மாற்று எரிசக்திகளின் தேவையை புரிய வைக்க வேண்டும். டீச்சர் போர் அடிக்க வைக்கிறார்கள் என்று அவர்கள் நினைத்துவிட கூடாது. மாணவர்களும், ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். மாணவர்களுக்குள் ஒளிந்து இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். நீங்கள் இன்றைக்கு விதைக்க போகிற விதைகள் தான், நாளைக்கு நமது சமூகத்தில் முளைக்க போகிறது.

பக்குவமாக சொல்லுங்கள்

மாணவர்களுக்கு எந்த அளவுக்கு அறிவாற்றல் முக்கியமோ அந்த அளவுக்கு உடல்நலமும், மன நலனும் முக்கியம். மாணவர்களை ரொம்ப பிரஷர் பண்ண கூடாது. நாம் அன்பாக, பக்குவமாக சொன்னால் மாணவர்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு ஜாதிய உணர்வு, பாலின பாகுபாடு வராமல் நீங்கள் தான் பார்த்துகொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு நல்ல ரோல் மாடலை அறிமுகம் செய்யுங்கள், நீங்களே நல்ல ரோல் மாடலாக இருங்கள். மாணவர்களிடம் அடிக்கடி மனது விட்டு பேசுங்கள். ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Sun
செப் 21, 2025 00:09

யாரேனும் பக்கோடா வாங்க காசு கொடுத்தால் அதில் கமிஷன் அடிக்கக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும் இல்லா விட்டால் வயது ஆனாலும் அக் கமிஷன் அடிக்கும் பழக்கம் தொடரும் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும்.


N S
செப் 20, 2025 21:08

அதனால் தான் "அப்பா–க்கு" அன்றும், இன்றும், என்றும், "துண்டு சீட்டு". அதுவும் சரியாக படிக்க தெரியாது. ......


sreelal
செப் 20, 2025 18:32

நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கும் மருமகனுக்கும் மட்டும் நல்ல ரோலாக இருப்பதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு நல்ல ரோலாக இருங்கள்


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 20, 2025 16:02

பிட்டு பேப்பர் மூலமும் விவரம் தெரிந்துகொள்ளலாம். பிட்டு பார்த்து எழுதும் தலைமுறையை சேர்ந்த எழுச்சிமிகு தலைவர் தற்காலத்தில் பிட்டு பார்த்து படிக்கும் அளவு உயர்ந்துள்ளது திராவிடர்களுக்கு பெருமை. தமிழன் திராவிடனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். கூகிள் ஏ ஐ பார்த்து அல்ல.


Sivaram
செப் 20, 2025 15:31

முப்பெரும் விழா மக்கள் வரி பணத்தில் அன்பில் தர்மலிங்கம் பேரன் ஏற்பாடு அன்பில் குடும்பம் என்றாலே கருணாநிதி குடும்பத்துக்கு ஒரு தனி கரிசனம் நட்பின் இலக்கணம் என்றால் இவர்கள் அல்லவோ உடன்பிறப்பே


theruvasagan
செப் 20, 2025 14:59

2715 பேர்களையும் முதல்வர்களாக நினைத்து.....அத்தனை பேருக்கும் துண்டுச் சீட்டு எழுதித்தர ஆயிரக்கணக்கில் ஆளெடுக்க வேண்டியிருக்குமே.


R.MURALIKRISHNAN
செப் 20, 2025 14:57

ஆமா, தலைவர் துண்டு சீட்டு கேக்கற மாதிரி கேக்க கூடாது


hariharan
செப் 20, 2025 14:57

ஏஐ அல்லது கூகுளிடம்கூட கேட்டால் பதில் கிடைக்கும். ஆனால் தமிழ்நாடு அரசு இணையதளங்கள் பாதி நேரமும் வேலை செய்யாது.


C.SRIRAM
செப் 20, 2025 14:49

இப்போது தான் கூகுளுக்ககே வந்திருக்கிறார் . சாட் ஜி பி டீ க்கு வர பலவருடங்கள் ஆகும் போல ?. இவருக்கென்ன துண்டு சீட்டு போறும் . எல்லார்க்கும் அப்படியா ?


Sridhar
செப் 20, 2025 14:41

சரியாப்போச்சு, அவனவன் chatGPT டீப்சீக் னு போயிட்டுருக்கும்போது, இந்த ஆளுக்கு எழுதிக்கொடுத்தவன் இன்னும் கூகுல் லேயே நின்னுக்கிட்டுருக்கானா? மாணவர்களை விடுங்க, ஆசிரியர்களுக்கே போதிக்கும் அளவுக்கு யோக்கியதை இருக்காங்கற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆளு AI பத்தியெல்லாம் பேசுறத பாக்கும்போது சிரிப்பை அடக்க முடியல.


சமீபத்திய செய்தி