உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவை பாக்., தாக்கியதற்கு ஆதாரம் உண்டா? அஜித் தோவல் ஆவேசம்

இந்தியாவை பாக்., தாக்கியதற்கு ஆதாரம் உண்டா? அஜித் தோவல் ஆவேசம்

சென்னை: “பாகிஸ்தான் மீதான போர் தொடர்பான உண்மைகளை, மேற்கத்திய ஊடகங்கள் தவறாக காட்டுகின்றன. இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியுமா,” என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேள்வி எழுப்பினார்.சென்னை ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின், 62வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்த, 3,227 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.பின், அஜித் தோவல் பேசியதாவது:நாம், 1,000 ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்டவர்கள் என்பதை, மனதில் வைத்து கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியின்போது, நம் நாட்டின் உரிமைகள் அடிமையாக்கப்பட்டு இருந்தன. அடுத்த 22 ஆண்டுகளில், நாம் சுதந்திர தின நுாற்றாண்டை கொண்டாடுவோம். அப்போது, சமூக பொறுப்புகளையும் உணர்ந்து, நம் நாட்டுக்கு உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.நம் நாடு பல துறைகளில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. ராணுவத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் சக்திவாய்ந்த பொருளாதார நாடாக, நாம் மாறுவோம். 110 கோடி பேர் வேலைக்கு செல்வோராக இருப்பர். பாதுகாப்புத் துறை, உற்பத்தி, சமூக பொருளாதார முன்னேற்றம் என, அனைத்து துறைகளிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோராக, நீங்கள் இருப்பீர்கள் என நம்புகிறேன்.நம் நாட்டிற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் கணிசமாக தேவைப்படுகிறது. உலகில் எங்கு பணிபுரிந்தாலும், நீங்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி படைப்புகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும்.மற்ற நாடுகள் உதவி இல்லாமல், '5ஜி' தொழில்நுட்பத்தை மேற்கொள்ள முடிவு செய்தோம். சீனா பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, 5ஜி 'நெட்வொர்க்கை' மேம்படுத்தியது. நாம் இரண்டரை ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விட்டோம்.நம் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பை நினைத்து பெருமைப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒவ்வொரு ஆண்டும் மாற்றத்தை ஏற்படுத்தும். 'ஆப்பரேஷன் சிந்துார்' போரில், நாம் ஒன்பது தீவிரவாத இலக்குகளை சரியாக தாக்கினோம். இதில், எந்த இலக்கும் எல்லையில் இல்லை. தொலைதுாரத்தில் இருந்த இலக்கையும் குறிவைத்து தாக்கினோம்.இந்த தாக்குதல் துவங்கிய 23 நிமிடங்களில், மொத்த ஆப்பரேஷனும் முடிந்து விட்டது. அதனால், நம் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் உண்மைகளை தவறாகவே காட்டுகின்றன.நீண்ட போராட்டங்களை, ஒரு வரியில் ஒழுங்குபடுத்த முயல்கின்றன. நாம் காட்டிய பொறுமையையும், தவிர்க்கப்பட்ட பதில்களையும், அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் காட்டும் காட்சிகள், அவர்களுக்கேற்ற ஒரு கட்டமைப்புக்குள் பொருந்தும்படி வடிவமைக்கப்படுகின்றன. இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள், அதற்கு சான்றாக ஏதாவது ஒரு புகைப்படத்தை காட்ட முடியுமா? பாகிஸ்தானால், இந்தியாவில் ஒரு கண்ணாடியை கூட உடைக்க முடியவில்லை.நம் எல்லையில் என்ன நடந்தது, நாம் எத்தனை முறை எதிரி நாட்டை எச்சரித்தோம் என்பது பற்றி இவர்கள் தெரியப்படுத்துவதில்லை. பதிலடி கொடுப்பது எளிது; பொறுமையை கடைப்பிடிப்பது தான் வீரம்.நாம் ஒரு நாடாக இருக்கிறோம் என்பதற்கான உண்மையான அடையாளம், நம் நாகரிக ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், சில நேரங்களில் நம்மை மீறி வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட, கைவிடாமல் இருப்பது தான். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஐ.ஐ.டி., நிர்வாக குழு தலைவர் பவன் கோயங்கா, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

venugopal s
ஜூலை 12, 2025 12:58

வீர வசனம் எல்லாம் நன்றாகவே உள்ளது.ஆனால் உங்களால் இன்னும் அந்த நான்கு பஹல்காம் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியவில்லை என்ற உண்மை மட்டுமே மனதில் உறுத்தலாக உள்ளது!


கலிவரதன்,திருச்சி
ஜூலை 12, 2025 14:15

அறிவாலய வாட்ச்மேன் வேணுவுக்கு இன்னக்கி என்ன வார விடுமுறையா?


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 14:46

தா கிருட்டிணன், ராமஜெயம் படுகொலை குற்றவாளிகளை திமுக அரசு கண்டுபிடிச்சிட்டார்களா? அப்படி ஒரு எண்ணமே வராதே.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 10:10

இந்திய வரலாற்றில் ஆயுத பலத்தால் இந்தியாவை யாரும் தோற்கடித்ததாக வரலாறு இல்லை ,,இந்தியாவில் இருக்கும் இந்திய துரோகிகளால்தான் முன்பு இந்தியா தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது .. இன்போது இருப்பது வலிமை வாய்ந்த அரசு .. மற்ற நாடுகளின் கடனுக்காகவும் ..ஆயுதங்களுக்காகவும் கையேந்தி நின்ற காலம் போய்விட்டது .. இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக முன்னேறிவிட்டது ...ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது .. இந்தியாவில் அந்நியச்செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலர்களை தாண்டிவிட்டது These reserves not only safeguard India’s currency but also reflect decades of disciplined financial planning and economic ரேஸிலின்ஸ்...இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த எதிரிகளை 45 நிமிடங்களில் அடித்துவிட்டு முடித்துவிட்டு மற்ற வேலையை பார்க்கத்துவங்கிவிட்டது .. அடிபட்டவர்கள் கதறுகிறார்கள் .. அஜித் தோவல் கேட்கும் ஆதாரத்தை கொடுக்கலாமே ..


SVR
ஜூலை 12, 2025 10:03

இங்க சில தற்குறிங்க மாநாவாரியா ஏதேதோ பதிவிடுதுங்க. வட மேற்கு திசையிலிருந்து அல்லது வடக்கு அல்லது வடகிழக்கு/கிழக்கு பகுதியில் நம் நாட்டுக்கு சண்டை வந்தால் மொதல்ல அடி வாங்கறது தமிழன் இல்ல. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஜனங்கள் தான். தமிழ் நாட்டுக்கு கண்டிப்பாக மத்திய அரசு ஏவுகணைகள் வராமல் பார்த்துக்கொள்ளும். இந்த ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானியர்கள் ட்ரோன்களை ஏவியதும் மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் தான் என்று ஊடகங்களும் தெரிவித்துள்ளன. பாரதத்தின் தெற்கு பகுதியில் அதுவும் தமிழகத்தில் ட்ரோன்கள் எதுவும் தென்படவில்லை. தமிழன், கன்னடகாரன், தெலுங்கானா தெலுங்கன் எதிர் கட்சி ஆட்கள் இந்த விஷயத்தில் பேசாத பேச்சு பாக்கி இல்லை. தெற்கு பக்கத்து ஆட்கள் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தார்கள் போலும். அஜித் தோவால் மேற்கத்திய ஊடகங்களுக்கு சவால் விட்டிருக்கிறார். அவர்களிடம் உண்மையாகவே ஆதாரம் இருந்தால் அதை வெளியிடட்டுமே? ஏன் தயங்குவானேன்? சாதாரணமாக இந்த மனுஷர் எங்கும் பேசமாட்டார். அவர் பேசியிருக்கிறார் என்றால் அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நம் நாட்டு ராணுவம் தான் அடித்த எல்லா இடங்களையும் படம் பிடித்து காட்டியிருக்கிறது. பாகிஸ்தானின் பிரதமரும் அடி வாங்கியதை ஒப்பு கொண்டிருக்கின்றார். அப்புறம் என்ன தெற்கத்தி ஆட்களுக்கு ஆதாரம் வேண்டி கிடக்கு. இங்குள்ளனெல்லாம் சும்மா ஜல்ஸா செய்து கொண்டு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறான். திருவிளையாடல் தருமி மாதிரி இவனுக்கு கேள்வி கேக்கத்தான் தெரியும். பதில் சொல்ல தெரியாது. ஓடிவிடுவான். இந்த ஆப்ரேஷநின் இலக்கு பயங்கரவாதிகளின் இருப்பிடத்தையும் அவர்களையும் துவம்சம் செய்வது தான். அது செவ்வனே நிறைவேறியது. இங்குள்ளவனுக்கு தாரை வார்க்கத்தான் தெரியும். அதை மீட்க வேறு ஒருவர் வர வேண்டும். ஆனால் பேச்சு காதளவோடியதாய் இருக்கும். அஜித் தோவால் அவர்களே நீங்களோ இன்னும் சில காலங்களில் ஓய்வு பெற போகிறீர்கள். ஒரு திறமை வாய்ந்த நபரை தயார் செய்து உங்களுடைய இடத்தை நிரப்பவும். இங்குள்ளவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருபார்கள். அதை சட்டை செய்யாதீர்கள். உங்களுடைய வேலையை செவ்வனே செய்யுங்கள். அது போதும் நாடு பாதுகாப்புடன் இருக்க.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 12, 2025 12:03

அற்புதமான பதிவு ..அருமை ..அருமை ...


முதல் தமிழன்
ஜூலை 12, 2025 09:05

வீண் ஜம்பம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. நான் நினைத்தேன், பாக்கிகள் அவ்வ்ளோதான் என்று இவர்கள் தினம் சொல்லி வந்ததை வைத்து ஆனால் நடந்தது என்ன யாருக்கும் தெரியாது. இஸ்ரேல் அட்டாக் தினம் செய்தியில் படத்துடன் வருது ஆனால் நம் அரசு இன்னும் தெளிவான பாக்கிஸ்தான் அழிந்த படங்களை வெளியிடவில்லை. வெளியிட்டு நம்மளை சந்தோஷ படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். முறம் நிறைய பெருமை புடைத்து பார்த்தா வெறும் முறம் மாதிரி உள்ளது இவர்கள் பேச்சு. எல்லை பகுதியில் ஓட்டு வேணுமானால் வாங்க உதவும் மற்றபடி என் ஆசை பாகிஸ்தானுக்கு இன்னும் நல்ல மரண அடி கொடுத்து படங்களை நம் மனம் குளிர வெளி விடும்படி கேட்டு கொள்கிறேன். வாழ்க இந்திய தேசம். ஓங்குக இந்தியன் புகழ்.


V.Chezhian
ஜூலை 12, 2025 12:27

கொத்தடிமை. முரசொலி தவிற வேறு எதுவும் படிக்காது போல.


SIVA
ஜூலை 12, 2025 09:04

ஆபரேஷன் சிந்துருக்கு முன்பு தீவிரவாதிகளும் , பாகிஸ்தானும் வெறும் வாய்ச்சவடால் விட்டன , இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று வெறும் வீர வசனம் மட்டுமே பேசியது , இன்று பிஜேபி ஆட்சியில் அடிக்கும் போது நான் அடிப்பேன் என்று சொல்லி அடிகின்றது , அடிப்பது பெரிய விஷயமில்லை ஆனால் அதை சொல்லி விட்டு அடிக்க ஒரு தைரியம் திறமை வேண்டும் அது இன்று இந்தியாவிடம் உள்ளது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 07:49

இவர் பேசப்பேச பச்சைஸ்க்கு எரியுமே >>>>


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 07:32

ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் நமது நாட்டின் தற்காப்பு கருவிகளை நாமே தயாரித்துக் கொள்ளு வதால் மேற்கத்திய நாடுகளின் வருமானமும் அதில் காங்கி க்கு கிடைத்து வந்த கட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஆத்திரத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்.


SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 06:55

Terrorists took 26 innocent lives in Pahalgam, Modi struck Pak with missiles, made Pak Army carry bodies of terrorists, declined US effort to mediate Liberals: Modi is weak. Dr Singh showed strength by doing absolutely nothing after 200+ Indians died in 2006 Mumbai train bombing


R.RAMACHANDRAN
ஜூலை 12, 2025 06:25

இந்த நாட்டில் வாய்மையே வெல்லும் என்பது செயல்பாட்டில் இல்லாததால் எங்கு பார்த்தாலும் பொய் சொல்லுவது பித்தலாட்டம் செய்வது தான் செயல்பாட்டில் உள்ளது. இங்குள்ளவர்கள் பொய் சொல்லுவது பித்தலாட்டம் செய்வது ஆகியவற்றிற்கு சுதந்திரத்தை பயன்படுத்தும் போது மேற்கத்திய நாடுகளின் உடன்கண்கள் மீது தற்பெருமைக்காரர்கள் ஆத்திரப்படுகின்றனர் இவர்களை புகழ்வில்லை என.


சந்திரசேகரன்,துறையூர்
ஜூலை 12, 2025 06:57

முதலில் உன்னைப் போன்ற உள்நாட்டு துரோகிகளை களையெடுக்க வேண்டும் அப்போதுதான் வாய்மை வெல்லும்...


Arul Narayanan
ஜூலை 12, 2025 05:33

போரின் போது காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில ராணுவ வீரர்கள் உட்பட சில மனிதர்களை கொன்றுள்ளனரே?


Arjun
ஜூலை 12, 2025 07:58

நாம் தாக்கியது தீவிரவாத முகாம்களை தவிர மக்கள் வசிக்கும் இடங்களை அல்ல எதிரிகள் மக்கள் வசிக்கும் இடங்களை தாக்கினார்கள் இந்திய ராணுவ நிலைகளை அவர்களால் தொட கூட முடிய வில்லை. இந்தியன் பெருமை கொள்வேன் .ஜெய்ஹிந்த்.


சமீபத்திய செய்தி