உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் துயில் களைவது எப்போது?

முதல்வர் துயில் களைவது எப்போது?

சென்னை: 'பெண்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து துன்பம் நேரிடுகிறது. முதல்வர் ஸ்டாலின் துயில் களைவது எப்போது' என, த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில், தாங்க முடியாத கூட்டு பாலியல் கொடுமை நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே; பெண்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்கு கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து, சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

திகழ் ஓவியன்
நவ 04, 2025 18:36

முதல்வர் துயில் களைவது...பிப்ரவரி 31...


angbu ganesh
நவ 04, 2025 09:51

யாரோ எழுதி கொடுக்கறது படிக்கறதுக்கு உங்களுக்கெதுக்கு வோட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை