உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாபெரும் தலைவர்களின் பெயர்களை புறக்கணித்தது ஏன்: அண்ணாமலை கேள்வி

மாபெரும் தலைவர்களின் பெயர்களை புறக்கணித்தது ஏன்: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:திமுக அரசு கொடுத்துள்ள பட்டியலில் மாபெரும் தலைவர்களின் பெயர்களை புறக்கணித்திருப்பது ஏன் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அண்ணாமலை அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=amxhgf2f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், ஜாதிப்பெயர்களுக்கான மாற்றுப் பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளையும் வழங்கி இருக்கிறது. அவற்றில், மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை திமுக அரசு புறக்கணித்திருப்பது ஏன்? அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே திமுக அரசு பார்க்கிறதா? மேலும், திமுக அரசு கொடுத்துள்ள பட்டியலில், ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தமிழகத்தின் பெருமைக்குரிய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை புறக்கணித்திருக்கிறது.அப்படி அந்தப் பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என்று பார்த்தால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத் தானே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வது என்று உங்கள் தந்தை செய்த நகைச்சுவைகள் போதாதென, தற்போது பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, அவரை மிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்? முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், எம்.ஜி.ஆர். பெயர் எங்கே?ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திருத்தி, மேற்கூறிய அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

நிக்கோல்தாம்சன்
அக் 10, 2025 05:32

டாஸ்மாக் நாயகன் கலைஞர் என்று எழுதினா கோவம் வருமா ?


Sum
அக் 09, 2025 13:51

1996 ல் மதுரை மேலூரில் ஏற்பட்ட ஜாதி கலவரத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் கொல்லப் பட்ட போது போக்குவரத்து கழகம், மற்றும் மாவட்டங்களின் தனி நபர்களின் பெயர்கள் மாற்றப் பட்ட போது பாவம் ,ஒரு பாவமும் அறியாத எழுத்தாணியை மட்டுமே தன் கையில் வைத்திருந்த, உலகப் பொதுமறை தமிழ் மறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயரையும் சேர்த்து தூக்கினார்கள். மதுரை மேலூர் கலவரத்திற்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்மந்தம்? பெயரைத் தூக்கும் போது திருவள்ளுவரையும் சேர்த்து தூக்குவார்கள். ஆனால் பெயரை சேர்க்கும் போது மட்டும் கருணாநிதி பெயரை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார்கள். தெரு , வீதி பெயர்கள் எல்லாமே ஒரு அடையாளத்திற்கு தானே? இனி எந்த தனி மனிதர்கள் பெயரையுமே அதற்கு வைக்காதீர்கள். நதிகள், மரங்கள், பறவைகள், மலர்கள் மிருகங்கள், இயற்கைகள் பெயரை மட்டுமே வையுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. காவிரி நகர் 1,2,3,4 ம் வீதி, பொதிகை நகர் 3ம் வீதி , மல்லிகை நகர், குறிஞ்சி நகர் இது போல பெயர்களை மாற்றலாமே? தனி நபர்கள் பெயர்களை வைப்பதால் தானே உன் ஜாதி, என் ஜாதி, உன் கட்சி, என் கட்சி ,உன் மதம் என் மதம் பிரச்சனைகள் உருவாகிறது.


N S
அக் 09, 2025 07:42

நாங்கள் "முத்தமிழ் அறிஞர் குறள் வித்தகர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பல்கலை கழகம்" அமைக்க முயற்சிக்கும் பொழுது இந்த முட்டு கட்டை தேவையா?


ஆரூர் ரங்
அக் 09, 2025 14:46

டெக்னாலஜி பல்கலைக்கழக துக்கும் அண்ணாதுரைக்கும் என்ன சம்பந்தம்?. நோபல் பரிசு பெற்ற 3 விஞ்ஞானிகளின் அல்லது கணித மேதை ராமானுஜன் போன்ற பெயர்களை வைத்திருக்கலாமே.


raja
அக் 09, 2025 07:15

தமிழர்கள் அந்த புறங்கை நக்கிய ஊழல் விங்யானியின் பெயரை வைத்து உள்ள அனைத்து இடங்கள் சாலைகள் கட்டிடங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்க வேண்டும்...


Kasimani Baskaran
அக் 09, 2025 04:19

அப்படியெல்லாம் பார்த்தால் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் இந்த திராவிட கட்சியினர். குறிப்பாக அண்ணாதுரை மற்றும் இராமசாமி நாயக்கர். பொது இடங்களுக்கு அவர்களின் பெயர்களை சூட்டுவது தேசிய அவமானம்.


Perumal Pillai
அக் 08, 2025 23:38

கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் , திரிச்சி பஸ் ஸ்டான்ட் பெயர் மாற்றப்பட வேண்டும் . சென்னை சென்ட்ரல் பெயரும் மாற்றப்பட வேண்டும்.


V. Rajan
அக் 08, 2025 23:18

அண்ணாமலைக்கு தெலுங்கு ஆகாது.


மணிமுருகன்
அக் 08, 2025 23:13

சாதி பெயரை நீக்கிவிட்டு அந்த இடத்தின் ஊரின் சிறப்பு வாய்ந்தவர்கள் பெரை வைக்கவேண்டும் கருணாநிதி சுதந்திரப் போராட்ட வீரரா எத்தனை முறை சிறை சென்றார் மக்கள் அவரவர் பகுதிகளுக்கு ஏற்றபெயர் வைப்பதை விரும்புவார்கள் கண்டிப்பாக சிறந்த தேசத்தலைவர்கள் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் கலைவாணருக்கு சொந்தமான இடத்தை அவர் தானம் பண்ணியதை கருணாநிதி தன் பெயரை வைத்தவர் இன்னும் போகவில்லைப் போல மோகம்


குடிகாரன்
அக் 08, 2025 22:50

எதிர் வரும் காலத்தில் திருட்டு திராவிட கும்பலின் தலைவன் மற்றும் வாரிசுகளின் பெயர்கள் அனைத்து இடங்களிலும் நீக்கப் பட வேண்டும்.


rama adhavan
அக் 08, 2025 22:34

ஒரு வருடத்திற்கு ஒரு 10000 பலவகையான, மூத்த அதிகாரிகளின் மாற்றல் உட்பட அரசாணைகள் வெளியிடப் படுகின்றன. இதில் எதை நினைவு வைப்பது? அது போல் தான் இதுவும்.


சமீபத்திய செய்தி