உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாடம் கற்றுக்கொள்ளுமா திமுக?

பாடம் கற்றுக்கொள்ளுமா திமுக?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -

'வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு, குத்துதே குடையுதே என்று புலம்புவது போல' ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி, தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு, அதனால் ஏற்படும் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு தவிப்பதை தான் குறிக்கிறது.கடந்த 2022ம் ஆண்டு இது நடந்தது. தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு மனித உரிமை காரணங்களை முன்வைத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். அதாவது, அப்போதைய அரசின் உத்தரவுப்படி அதிகாரி அந்த தடையை விதித்தார். இந்த உத்தரவு தி.மு.க., அரசுக்கு எதிராக, அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7zg25v85&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திராவிடர் கழகம் மற்றும் சில அமைப்புகள், 'மனிதனை மனிதன் பல்லக்கில் துாக்கி சுமப்பது மனித உரிமை மீறல்' என்று எதிர்ப்பு தெரிவித்ததால், தடை விதிக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.தி.க., என்ற இயக்கத்தால், மாநிலம் முழுதும் மொத்தத்தில் 1,000 பேரைக்கூட கூட்ட முடியாது. அப்படிப்பட்ட, 'பலமான' அமைப்புக்கு பயந்து, பட்டினப்பிரவேசத்தை தடுத்தது தி.மு.க., அரசு. கடும் எதிர்ப்பு எழுந்ததும் தடையை விலக்கி, பட்டினப்பிரவேசம் நடத்த அனுமதித்தது தி.மு.க., அரசு.இதற்கிடையே சர்ச்சை ஏற்பட்டதும், உயர் நீதிமன்றத்திற்கு இப்பிரச்னை சென்றது. அதன் மீது அப்போது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் அடங்கிய பெஞ்ச், 'பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.'சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தடை விதிக்கப்பட்டது' என்று காரணம் கூறும் அரசு, ஆதரவு இருப்பதால் அனுமதி தரப்பட்டது என்று கூறவில்லை. தி.மு.க.,வுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு முக்கியமா, மக்கள் ஆதரவே இல்லாத தி.க.,-வின் ஆதரவு முக்கியமா என்று தெரியாமல், தி.க., என்ன சொன்னாலும் அதற்கு ஏற்ப ஆடியது.ஆனால், இந்த ஆண்டு என்ன நடந்தது. தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் இரண்டு நாட்களுக்கு முன், வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த பகுதி மக்களை தவிர, வேறு யாருக்கும் நடந்ததும் தெரியவில்லை; மு டிந்ததும் தெரியவில்லை.செய்யப்பட வேண்டிய அனைத்து சடங்குகளும் சரியாக செய்யப்பட்டுள்ளன. அப்பகுதி பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கோவிலிலும் இதுபோல் ஏதாவது விழாக்கள் ஆண்டு முழுதும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்றால், அதில் உடனே மூக்கை நுழைப்பது தி.மு.க.,வின் ஜாதகம்.அதில் மட்டும், தி.மு.க.,வுக்கு அப்படி ஒரு ஆனந்தம். இதனால், தி.மு.க., என்றாலே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பெயர் வலுப்பட்டுவிட்டது. மக்களும் வேறு வேலை வெட்டி இல்லாமல், இப்பிரச்னை பற்றியே பேசத் துவங்கி விடுகின்றனர். தி.மு.க.,வின் இந்த செயல்பாட்டால் இறுதியில் என்ன ஆனது. தேர்தலில் தோற்று, ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறது அக்கட்சி.பட்டினப்பிரவேசம் மட்டுமல்ல; அனைத்து ஹிந்து விழாக்கள், மதச்சடங்குகள், பழக்க வழக்கங்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருந்தாலே போதும். அந்தந்த விழாக்கள் அமைதியாகவும், மக்கள் ஆதரவுடனும் நடந்து முடிந்து விடும்.மக்களும் பிரச்னை, பிரச்னை என்று அதை பற்றியே சில நாட்கள் பேசாமல், அடுத்த வேலையை பார்க்க போய் விடுவர். இந்த ஆண்டு அமைதியாக நடந்து முடிந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் இருந்தாவது தி.மு.க., பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசின் வேலை அரசாள்வது மட்டுமே. இதுவே மக்கள் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

விருமாண்டி
ஜூன் 10, 2026 18:33

தருமபுரம் ஆதீனம் மற்றும் அவரது மடத்து நிர்வாகிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பலிடமிருந்து காப்பாற்றி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தது தமிழக காவல்துறையும் மயிலாடுதுறை போலீஸார். மற்றும் தமிழக அரசும் ஆகும். இந்த விவகாரத்தில் ஆதீனத் தரப்பைக் காப்பாற்ற நடந்த முக்கிய பின்னணி நிகழ்வுகள்: அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் தலையீடு: மிரட்டல் கும்பலின் தொல்லை எல்லை மீறிச் சென்றபோது, ஆதீனம் தரப்பில் இந்த விவகாரம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் போலீஸார் உடனடியாகச் செயல்படத் தொடங்கினர். காவல்துறையின் அதிரடி நடவடிக்கை: ஆதீனத்தின் தம்பி விருத்தகிரி கொடுத்த புகாரின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் மிரட்டல் விடுத்த ரவுடிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களைத் தீவிரமாகத் தேடி, மும்பை வரை சென்று முக்கிய குற்றவாளியான அகோரத்தைக் கைது செய்தனர். மிரட்டல் கும்பல் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி மடத்தின் நிர்வாகிகளை நேரில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றபோது, காவல்துறையின் இந்தத் துரித நடவடிக்கை தான் ஆதீனத்தையும் மடத்தையும் அந்தச் சதியிலிருந்து மீட்டுக் காப்பாற்றியது. இதற்காக தருமபுரம் ஆதீனம், தமிழக முதலமைச்சருக்கும் அரசுக்கும் அப்போது தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். சரித்திரம் முக்கியம் அரைகுறைகளே.


விருமாண்டி
ஜூன் 11, 2026 08:44

மிரட்டி பணம் பறிக்க திட்டம் போட்டது பாஜக நிர்வாகி கடலூர் அகோரம் என்பது சரித்திம். அதை மறைக்க முடியுமா?


விருமாண்டி
ஜூன் 11, 2026 12:06

நடந்தது 2024 இல் அரைகுறைகளே. ஒரு செய்தியை போட்டா இப்படியா வெட்டி போடுவீங்க. எம்புட்டு திருத்தங்கள் தான் செய்யறது?


RAVINDRAN.G
ஜூன் 10, 2026 10:48

திமுக திருந்தாது. அது அவர்களின் கொள்கை.


Indhiyan
ஜூன் 10, 2026 09:12

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? உங்களுக்கு எப்படி தெரிய போகிறது? நீங்கள் வெட்டியாக இருந்துகொண்டு மற்றவர்களை வெட்டி என்று சொல்லக் கூடாது. தருமபுரம் தொன்மையான மற்றும் புகழ்பெற்ற சைவ மடம். குரு ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி உங்களை மாதிரி வெட்டி கிடையாது. சைவ சித்தாந்த சொற்பொழிவுகள் மற்றும் ஆன்மீக வகுப்புகளை நடத்துகிறார். நிறைய பள்ளிகளை நடத்துகிறார். தமிழ் மொழி,தேவாரப் பாடல்கள், திருவாசகம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான நிகழ்வுகளையும் நடத்துகிறார்.


விருமாண்டி
ஜூன் 10, 2026 17:38

கழுதையை வைத்து இந்த சுமையை கொண்டு போகலாமே.


Indhiyan
ஜூன் 10, 2026 20:12

நீங்கள் அவரை சுமக்கலாம் என்கிறீர்கள். நல்ல மன மாற்றம். செய்யுங்கள். வாழ்த்துக்கள்.


M.Selvam
ஜூன் 10, 2026 09:08

இந்த காலத்தில் இது போன்று நிகழ்வுகள் அவசியமா என்பது யோசிக்கலாம்.. மதம் என்றால் வெறும் சாஸ்திர சம்பிரதாய நிகழ்வுகள் மட்டுமே என்று இல்லாமல் உண்மையாக நேர்மையா உழைத்து அன்பாக பண்பாக வாழ்வது என்று இருந்தால் நல்லா இருக்கும்...


விருமாண்டி
ஜூன் 10, 2026 08:24

நம்மை வளர்த்த வயதான தாய் தந்தையை சுமக்கலாம். வெட்டியாக இருக்கும் இந்தாளை சுமப்பதற்கு பதிலாக பால் தரும் எருமையை சுமக்கலாம்.


ஆரூர் ரங்
ஜூன் 10, 2026 10:42

தாய் தந்தை மட்டுமல்ல. மாதா, பிதா, குரு, தெய்வ வழிபாடு நமது கலாச்சாரம்.


விருமாண்டி
ஜூன் 11, 2026 08:49

பாஜக சீனியர் ஆபீசர் ஆச்சே நீங்க? பாஜக நிர்வாகி அகோரம் யாருன்னு விசாரிங்க, அவரை கேளுங்க, இந்தாளை தூக்குறதுக்கு அகோரம் என்ன பண்ணார்ன்னு.


pmsamy
ஜூன் 10, 2026 07:56

பொதுமக்கள் எவ்வளவு பேசினாலும் இறந்தாலும் கூட கடவுள் கல்லாக சிலையாக மட்டுமே இருப்பார் என்பதை இந்த அறிவில்லாதவர்களுக்கு புரியவே புரியாது


VENKATASUBRAMANIAN
ஜூன் 10, 2026 07:52

திமுகவுக்கு ஏன் ஓட்டு போடுகிறார்கள். இந்துக்கள் சுயமரியாதை இல்லாமல் இருக்கிறார்களா. மக்கள் ஒதுக்கினால் இதெல்லாம் தானாகவே அ.டங்கிவிடும்


M.Selvam
ஜூன் 10, 2026 15:56

இதிலேயே இந்துக்கள் எல்லோரும் ஒன்று அல்ல என்பது விளங்க வேண்டும்.. உங்களுக்கு தேவை என்றால் நாம இந்து என்பதும் சமுதாய நிகழ்வுகளில் ஒரு சிலரை தள்ளி ஒதுக்கி வைப்பதும் ஏன்? அதனால் இந்துக்கள் தனித்தனியா தான் சிந்திப்பார்கள்...


Senthilkumar Ganesan
ஜூன் 10, 2026 06:48

இருக்கிற பிரச்சினைல இவனுங்க வேற


Mani . V
ஜூன் 10, 2026 04:58

சந்தானம் ஒரு திரைப்படத்தில், "அவன் இன்னும் திருந்தலை மாமா" அப்படின்னு சொல்வது மாதிரி, திருட்டு திமுக இன்னும் திருந்தவில்லை. அதுக்கு வாய்ப்பும் இல்லை.


விருமாண்டி
ஜூன் 10, 2026 08:24

ஒன்னோட ஒரு விரல் திமுகவை சுட்டிக்காட்டுது. நாலு விரல்கள் உன்னை நோக்கி இருக்கிறது. வெட்டியாக இருக்கும் இந்தாளை சுமப்பதற்கு பதிலாக நம்மை வளர்த்த வயதான தாய் தந்தையை சுமக்கலாம். பால் தரும் எருமையை சுமக்கலாம்.


Indhiyan
ஜூன் 10, 2026 09:19

நான் கூட சொல்லுவேன் ஈவேரா வெட்டி, கருணாநிதி வெட்டி அப்புறம் வந்த உடன்பிறப்புகள் எல்லாம் வெட்டி. டாஸ்மாக்குக்கு போகத்தான் லாயக்கு


Kasimani Baskaran
ஜூன் 10, 2026 03:53

மதசார்பற்ற அரசு என்றால் அது இந்துமத சார்பற்ற அரசு என்று திராவிட மாடல் இயக்கக்குறிப்புப்புத்தகத்தில் எழுதியிருக்கிறது. மற்ற மதங்களின் நடைமுறைகளில் தலையிட மாட்டார்கள். மற்ற மதத்தினர் இந்து மத நம்பிக்கையில் தலையிட்டால் அதற்க்கு ஆதரவு வேறு காட்டுவார்கள். உதாரணத்துக்கு முருகன் மலை வக்ப் சொத்து என்று புதிதாக ஒரு குழப்பத்தையும், வள்ளுவர் கிறிஸ்தவ தத்துவ ஞானி என்று வேறு கொளுத்திப்போட்டு ஒரு பிரிவினர் வள்ளுவருக்கு வெள்ளை உடை அணிந்து இந்து அடையாளங்களை நீக்கிய பொழுது ஆதரவாக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டுப் போடும் இந்துக்களுக்கு அறிவு வரவில்லை என்றால் தீம்க்கா ஜெயித்துக் கொண்டே தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை