உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.50,000 இழப்பீடு கிடைக்குமா? திருமாவளவன் பேச்சால் சந்தேகம்

ரூ.50,000 இழப்பீடு கிடைக்குமா? திருமாவளவன் பேச்சால் சந்தேகம்

சென்னை : கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, 50,000 ரூபாய்க்கான காசோலை, வி.சி., சார்பில் வழங்கப்பட்ட நிலையில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பால், அந்த பணம் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தலா 50,000 ரூபாய்க்கான காசோலைகள் சமீபத்தில் வழங்கப்பட்டன.

இந்நிலையில், வி.சி., தலைவர் திருமாவளவன், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, வி.சி., சார்பில் தலா, 50,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான பணத்தை, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலர்களிடம் கேட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டச் செயலரும் தலா, 10,000 ரூபாயை கட்சி வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அனைத்து மாவட்ட செயலர்களும் பணம் கொடுக்க வேண்டும். பணம் இல்லாமல், காசோலை திரும்பி விட்டது என்ற நிலை வரக்கூடாது. காசோலையைத் தவிர்த்து நேரடியாகவும் பணம் செலுத்தலாம். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல், விரைவில் கட்சி நிர்வாக பொறுப்புகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருமாவளவன் அறிவிப்பால், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட காசோலைகள் செல்லுபடியாகுமா; அப்பணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணம் வழங்கப்படும்! விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கூறியதாவது: வி.சி., பொருளாதார வசதி படைத்த கட்சி இல்லை; கட்சி நிர்வாகிகளாக இருப்போர் பெரும் முதலாளிகள் அல்ல. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்துள்ளோம். அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் செய்யாததை, வி.சி., செய்துள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பணம் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் பணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Suppan
அக் 15, 2025 18:16

அறிவாலய அடிமைகளுக்கு பணத்துக்கு என்ன பிரச்சினை . தேர்தல் செலவுக்கு நிச்சயம் கிடைக்கும்


karupanasamy
அக் 15, 2025 16:02

புள்ளிங்கோ சிறுத்த குட்டிங்க கலெக்சனுக்கு கிளம்பிட்டானுங்க எல்லோரும் கடைய சாத்திட்டு கெளம்பிடுங்க.


SUBRAMANIAN P
அக் 15, 2025 14:13

எல்லாரும் செக்கை பேங்குல போடுங்க.. பணம் இல்லமே திரும்பும்.. அப்புறம் மோசடி கேஸ் போட்டு உள்ளதள்ளுங்க


SUBRAMANIAN P
அக் 15, 2025 14:11

தெரியாமே செக்கு குடுத்துட்டோம்.. பேங்குலயும் நாங்க எப்பவும் பணம் வெக்கிறது இல்ல.. அதனாலே பணம் குடுத்து உதவுங்க அண்ணே என்று கேட்கத்தான் நேற்று ஸ்டாலினை சந்திக்க சென்றிருந்தார் திருமா.. ஆனால் முதலமைச்சரோ, என்ன கேட்டுகிட்டா செக்கு குடுத்த.. போ போ என்று விரட்டிவிட்டார்.. ஆனால் வெளியில வந்து நன்றி சொல்ல போனதா கத உடுறாரு.. ஏற்கனவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா கட்சியிலோ கூட்டணியிலோ எவனோ பண்ற அலப்பறையினாலே தினமும் தூக்கமில்லாம தவிக்கீறாரு முதல்வர்.. இதுல இந்தாளு வேற..


Mr Krish Tamilnadu
அக் 15, 2025 13:20

205 மாவட்ட செயலாளர்கள் கட்சி வங்கி கணக்கில் உடனே 10000 செலுத்தி சலான் காப்பியை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்லில் போடவும். அண்ணே செயின் போடுறாரு. செயின் போடுறாரு. ஆமாம்.


Thravisham
அக் 15, 2025 11:41

சரக்கு மிடுக்கு, ரௌடியிசம், கட்ட பஞ்சாயத், ஜாதி பெயரை சொல்லி காசு பார்ப்பது இவனோடு கூட பிறந்தது. பிறப்பால் தெலுங்கானான இவர் தமிழக மக்களை ஏமாற்றி பிழைப்பது கேவலம். இந்த திருட்டு த்ரவிஷன்களின் கொட்டத்தை அடக்க ஜெயா மாதிரி இரும்புப் பெண்மணி இல்லையே என நாடு ஏங்குகிறது


sankar
அக் 15, 2025 11:30

வாங்கி மட்டுமே பழக்கம்போல


M Ramachandran
அக் 15, 2025 11:05

இந்த செய்தி அவங்க ஆண்டை யிடம் பணம் கரக்க செய்யும் முயற்சியெ.


RAVINDRAN.G
அக் 15, 2025 10:37

உங்களால் அடி உதை கொடுக்கமுடியும். மிரட்டி பணம் வாங்கித்தான் பழக்கம். இது என்ன புது பழக்கம். ஒன்னு ரெண்டு பேர் அடி உதை கொடுக்க தெரியாதவர்கள் இருக்காங்கபோல


KRISHNAN R
அக் 15, 2025 10:33

இது ஒரு.....


புதிய வீடியோ