வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உருட்டு. சுத்தமான எண்ணையில் ஆட்டிய உருட்டு.
விண்வெளி சாதனைகளை நிகழ்த்துவதில் NASA-வுக்கு நிகர் நாசா-தான் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
வாஷிங்டன்: பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இது மனித குலத்தின் சாதனைகளில் புதிய மைல்கல் என நாசா வர்ணித்து உள்ளது.பூமியில் இருந்து 402 கி.மீ., தூரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா நாட்டு விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கிய இது நொடிக்கு 8 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகிறது. இது உருவானது முதல், தற்போது வரை விஞ்ஞானிகள் அங்கு சென்று, சில நாட்கள் தங்கியிருந்து ஆய்வு முடித்த பிறகு பூமிக்கு திரும்புகின்றனர்.இங்கு 16 விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆய்வு பணியில் ஈடுபட்ட நிலையில், கடந்த வாரம் ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம், அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவின் டான் பெயிட், ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ரோஸ்காசின் அலெக்ஸி ஒவ்சினின், இவான் வாக்னர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். இதன் மூலம் அங்குள்ள விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இது ஒரு புதிய சாதனை.இது தொடர்பாக நாசா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: புதன்கிழமை விண்வெளி மையத்திற்கு சென்ற வீரர்கள் மூலம், தற்போது 19 மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளனர். இது மனித குலம் படைத்த விஞ்ஞான சாதனைகளில் புதிய மைல்கல். மனித ஆய்வின் புது எல்லைகளை விரிவுபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.
உருட்டு. சுத்தமான எண்ணையில் ஆட்டிய உருட்டு.
விண்வெளி சாதனைகளை நிகழ்த்துவதில் NASA-வுக்கு நிகர் நாசா-தான் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.