உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கூடைப்பந்து: பைனலில் இந்தியா

கூடைப்பந்து: பைனலில் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செரெம்பன்: மலேசியாவின் செரெம்பன் நகரில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால் ('டிவிசன் பி') தொடர் நடக்கிறது. இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான், உஸ்பெகிஸ்தான், சமோவா அணிகளுடன் இடம் பெற்றது. லீக் சுற்றில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் நேற்று, 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த இந்தோனேஷிய அணியை சந்தித்தது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 24-24 என சமநிலையில் இருந்தன. பின் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 65-53 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இன்று, இதில் இந்திய அணி, மீண்டும் ஈரானை எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் ஈரானை வென்ற இந்தியா, மீண்டும் அசத்தினால் கோப்பை வெல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy Sekar
செப் 19, 2025 05:45

அதெல்லாம் வென்றுவிடுவார்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள். கோப்பையோடு வருவார்கள். வாழ்த்துவோம்


முக்கிய வீடியோ