உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா

டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை திரித்து வெளியிட்டதாக எழுந்த விவகாரத்தில் பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்தது என்று, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.இந்த ஆவணப்படத்தில், டிரம்ப் பேசிய இரண்டு தனித்தனி வீடியோக்கள், எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.ஒரே வீடியோ போன்று தோற்றம் அளிப்பது போல் இந்த ஆவணப்படம் இருந்தது.இதன் மூலம் தன் உரையை திரித்து வெளியிட்டதாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிபிசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போலியான செய்தி என்றும் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணைக்கு பிபிசி நிறுவனம் உத்தரவிட்டது.முன்னாள் ஆலோசகரான மைக்கேல் பிரெஸ்காட் தலைமையிலான பிபிசியின் ஆசிரியர் வழிகாட்டுதல் குழு தொகுத்த 19 பக்க உள்தகவல் அறிக்கையில், டிரம்ப் கலவரத்தை தூண்டியது போன்ற பிம்பத்தை ஆவணப்படம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது பிபிசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.இந்த நிலையில், பிபிசி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பிபிசி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி வெளியிட்ட அறிக்கையில், 'இது முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். எனது பதவிக் காலம் முழுவதும், குறிப்பாக சமீபத்திய நாட்களில் எனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.புதிய டைரக்டர் ஜெனரல் நியமிக்கப்படும் வரை டிம் டேவி, அந்தப் பதவியில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vns
நவ 10, 2025 19:29

பிபிசி யின் கம்யூனிச முகத்தை பஜபா கிழித்தபோது இந்தியாவில் போராட்டங்களை நடத்தியது கான்க்ராஸ் கட்சி.


NARAYANAN
நவ 10, 2025 17:43

யாருக்கு வேண்டும் இவர்களது ராஜினாமா ? கண்துடைப்பு.இந்த நிறுவனம் பொய்யான செய்தி வெளியிடுவதையே தனது தொழிலாக கொண்டுள்ளது.குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக.இவர்களை, இந்த நிறுவனத்தை சட்டத்திற்கு முன்பு கொண்டுவந்து தண்டிக்க வேண்டும்.


Rathna
நவ 10, 2025 16:53

பிபிசி பாகிஸ்தானிய மர்ம நபர்களின் கையில் போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதன் தலைமை அதிகாரி ஒரு பாகிஸ்தானி. நிறுவனத்தில் 50% மேல் வேலை பார்ப்பது பாகிஸ்தானிய மர்ம நபர்கள்.


naranam
நவ 10, 2025 14:43

இந்த தில்லுமுல்லு பிபிசி செய்த நிறுவனம் தான் இந்தியாவில் பிரிவினையையும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தையும் வெகு நாட்களாகத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது.


Oviya vijay
நவ 10, 2025 13:56

அதெப்படி இங்கே திரித்து வெளியிடும் ஆட்கள் திமிராக வலம் வருகிறார்கள் ...?


Anand
நவ 10, 2025 13:09

தடைசெய்யப்படவேண்டிய கேடுகெட்ட ஊடகம், ட்ரம்ப் தடை செய்துவிடுவார் என்கிற பயம். அதுவே மற்ற நாடுகள் என்றால் இளக்காரம்.


சந்திரசேகர்
நவ 10, 2025 12:10

பிபிசி செய்தி நிறுவனம் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக தான் செய்தி வெளியிடும். இவர்கள் எண்ணம் என்னவென்றால் தான் ஆட்சி செய்த இந்தியா இப்போது தன்னை விட எல்லாவிதத்திலும் உயர்ந்து விட்டது என்கிற பொறாமை. பிரித்தாளும் பிரிட்டிஷ் அரசு


hari
நவ 10, 2025 11:23

barbarian broadcasting company


SUBBU,MADURAI
நவ 10, 2025 09:40

Every time India rises, BBC finds a way to dim the light. From glorifying Bhuttos anti India speech to reviving debunked Gujarat riot claims, to maps that erase our borders this isnt journalism. Its colonial residue repackaged as news.


duruvasar
நவ 10, 2025 09:17

பி பி சி சோரஸ் நிறுவனமாக மாறி வெகுகாலமாகிவிட்டது


A viswanathan
நவ 10, 2025 19:54

இப்போது தெரிகிறதா இங்கு நடக்காத ஒன்றை ஜோடித்து ஒளி பரப்புவார்கள்.மனசாட்சி இல்லாதவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை