உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹாங்காங் விமான நிலையத்தில் பரபரப்பு; சரக்கு விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி கடலில் விழுந்ததில் 2 பேர் பலி

ஹாங்காங் விமான நிலையத்தில் பரபரப்பு; சரக்கு விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி கடலில் விழுந்ததில் 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்தது. இந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. விமானம், ஓடுபாதையில் இருந்து கடலில் விழுந்து நொறுங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dfdg1skd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய விமானம் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், விமானத்தில் இருந்த நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.போயிங் 747 சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை விமான நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அண்மைக் காலமாக அடிக்கடி விமானங்கள் விபத்தில் சிக்கி வருவது பயணியர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Field Marshal
அக் 20, 2025 10:34

தீபாவளி கொண்டாடவில்லையா ?


Senthoora
அக் 20, 2025 09:26

ஒருபக்கம் மலைகள் மருபக்கம் வான் உயர கட்டடங்கள், இரு சிறிய கடல் பகுதி நடுவில் ஹாங்காங் விமான நிலையம், தரை ஏறுவதும் இறங்குவதும் செங்குத்தாகத்தான் நடக்கும், இதுவரை இப்படிநடந்ததில்லை. சரக்கு விமானம் என்பதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு.


Ramesh Sargam
அக் 20, 2025 07:58

இறந்தவர்களுக்காக வேதனை அடைகிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.


முக்கிய வீடியோ