உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடனில் மூழ்கிய பாகிஸ்தான் கையேந்தி நிற்கிறது; ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு

கடனில் மூழ்கிய பாகிஸ்தான் கையேந்தி நிற்கிறது; ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு

இஸ்லாமாபாத்: கடனில் மூழ்கிய நிலையில் இருக்கும் பாகிஸ்தான், 4.9 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பு படி ரூ.41,170 கோடி) கடன் வாங்க முடிவு செய்துள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், அங்கு தொழில் வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது. அத்தியாவசிய தேவையான கச்சா எண்ணெய் போன்றவற்றை வாங்க கூட முடியாத நிலைமையில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.

நிதி நெருக்கடி!

இதில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்கி உள்ளது. ஆனாலும் பாகிஸ்தானால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே இரண்டு தவணைகள் வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட தவணைக்கு, ஐ.எம்.எப்., பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் வாயிலாக, பாகிஸ்தானில் மின்சாரம், சமையல் காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கான வரியும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 2024-25 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி இலக்கை பாகிஸ்தான் அரசு அடையவில்லை. திட்டமிடப்பட்ட 3.6 சதவீதத்திற்கு பதிலாக வெறும் 2.68 சதவீத வளர்ச்சி விகிதத்தை மட்டுமே அடைந்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் நிதி நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.

ரூ.41,170 கோடி

இதனை சமாளிக்க, சர்வதேச வணிக வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன் ஏற்பாடுகள் மூலம் கூடுதலாக, 4.9 பில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பு படி ரூ.41,170 கோடி) கடன் வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் திட்டமிடல் செயலாளர் தலைமையில் நடந்த குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கையேந்தி நிற்கிறது!

ஒரு பக்கம் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து, ஊக்குவித்து, பாதுகாப்பு அளிப்பதாக, பாகிஸ்தான் கடும் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Prasan
மே 22, 2025 14:25

Pakistan already a bankrupt country for decades, should stay away from nuclear programs, other costly fighter jet purchases like J-17 or J-35 from China. Complete corruption. It could also lease its recently identified gold mines for cash. Atleast if it hands over Pakistan occupied Kashmir to India and ask help from India and praise India then India mother land could help atleast from collapses.


ஆரூர் ரங்
மே 22, 2025 11:09

எப்போதும் சிறுபான்மையினருக்காக குரல் கொடுக்கும் தீயமுக விடம் கையேந்தலாம். கொடுத்தாலும் கொடுப்பார்கள்.


RAMESH
மே 22, 2025 07:02

இந்தியாவில் உள்ள பன்றிஸ்தான் அடிமைகளிடம் ஊழல் பணம் அதிகமாக உள்ளது... விசுவாசம் காட்டப் போகிறார்கள்..ஜாக்கிரதை


Arinyar Annamalai
மே 22, 2025 06:22

த்ரவிஷன்கள் அங்கேயும் புகுந்துடானுங்களா?


Kasimani Baskaran
மே 22, 2025 04:08

முக்கியமாக ஐந்தாம் தலைமுறை விமானங்களை கொடுக்க சீனா தயாராக இருக்கிறது. அதை வாங்க டிரம்பரின் கடும் முயற்சியில் உலக வங்கி ஏற்கனவே கடன் கொடுத்து விட்டது.. அவர்களுக்கு விமானம் வருவதற்குள் இந்தியா தாக்குதல் நடத்தி ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்கவேண்டும். காங்கிரஸ் மற்றும் டிரம்பர் ஆகிய இரண்டு கோஷ்டியும் சீனாவையும், பாகிஸ்தானையும் இணைக்க பகிரத முயற்சி எடுத்து வருகிறார்கள். ஹாசா பிரச்சினை இஸ்ரேல் மட்டுமே புரிந்தது - அதே போல பாகிஸ்தான் பிரச்சினை இந்தியா மட்டுமே புரிந்தது.


M Ramachandran
மே 22, 2025 00:03

டிரம்ப் இருக்க பயமேன். தீவிரவாதிகளை பணம்கொடுத்து ஊக்கப்படுத்துவதும் அவர்களெ. பிற நாட்டிற்குள் தைரியமாக நுழைந்து கொல்பவனும் அவனெ. அடிமைநாடுகள் யேதும் செய்ய முடியாது.


M Ramachandran
மே 22, 2025 00:02

டிரம்ப் இருக்க பயமேன். தீவிரவாதிகளை பணம்கொடுத்து ஊக்கப்படுத்துவதும் அவர்களெ. பிற நாட்டிற்குள் தைரியமாக நுழைந்து கொல்பவனும் அவனெ. அடிமைநாடுகள் எனதும் செய்ய முடியாது.


M Ramachandran
மே 22, 2025 00:02

டிரம்ப் இருக்க பயமேன். தீவிரவாதிகளை பணம்கொடுத்து ஊக்கப்படுத்துவதும் அவர்களெ. பிற நாட்டிற்குள் தைரியமாக நுழைந்து கொல்பவனும் அவனெ. அடிமைநாடுகள் எனதும் செய்ய முடியாது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 23:59

ஒரு வருட டாஸ்மாக் வருமானத்திற்காக ஒரு நாடு கையேந்துவது கஷ்டமாக உள்ளது.


SIVA
மே 21, 2025 22:00

பாகிஸ்தானின் அடிப்படை பிரச்னை ஊழல் மட்டுமே , அதை மறைக்கவேய மதமும், தீவிரவாதமும், இந்தியாவும் , அங்கு பிச்சை கூட எடுக்க முடியாமல் 2.5 கோடி பேர் வெளிநாட்டில் பிச்சை எடுப்பதாக செய்தி ...நாமும் ஊழலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.இல்லையெனில் விடியல் பாகிஸ்தானை வென்று விடும் ....