ஜி - 20 மாநாடு டிரம்ப் ¥ டிமிக்கி
வாஷிங்டன்: தென்னாப்ரிக்காவில் நடைபெறும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில், தான் கலந்து கொள்ளப் போவதில்லை என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி - 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா உட்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடம்பெற்றுள்ளன. கடந்த 2023ல், ஆப்ரிக்க யூனியனும் இதில் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பரில் இருந்து ஓராண்டுக்கு இதன் தலைமை பொறுப்பு தென்னாப்ரிக்கா வசமானது. நடப்பாண்டுக்கான ஜி - 20 உச்சி மாநாடு, வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இந்த அமைப்பில் தென்னாப்ரிக்காவை சேர்த்ததற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால், உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அவர் நேற்று அறிவித்துள்ளார்.