உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளில் தனியார் ஹெலிகாப்டர் மலை மீது மோதிய விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் பலியாயினர். நேபாளின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரோகாப்டர் ஏஎஸ்.350 என்ற தனியார் ஹெ லிகாப்டர் நான்கு ஆண், ஒரு பெண் என 5 பேருடன் புறப்பட்டு வடகிழக்கு காத்மாண்டுவின் நெளவா கோட் மாவட்டத்தின் சூரியசெளர் என்ற இடத்தில் மலை மீது மோதி விபத்திற்குள்ளானது, இதில் ஹெலிகாப்டர் கீழ விழுந்து நொறுங்கியதில் 5 பேரும் பலியாயினர். இவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனவும் கூறப்படுகிறது. தகவலறிந்த ராணுவம், மற்றும் மீட்பு படையினர் சேதமடைந்த ஹெலிகாப்டரிலிருந்து 5 உடல்களையும் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை