உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நெடுஞ்சாலையில் சரிவு: சீனாவில் 19 பேர் பலி

நெடுஞ்சாலையில் சரிவு: சீனாவில் 19 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிந்ததில், அந்த வழியாக சென்ற கார்கள் அதில் கவிழ்ந்து 19 பேர் உயிரிழந்தனர்.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது மெய்ஜோவு நகர். இங்கு, சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, அந்நாட்டு நேரப்படி இன்று( மே 01) அதிகாலை 2 மணியளவில் அந்நகரில் உள்ள நெடுஞ்சாலை 18 மீட்டர் தூரம் அளவுக்கு சரிந்து விழுந்தது. இரவு நேரத்தில் சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த 18 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து தீப்பிடித்தன. இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
மே 01, 2024 16:44

நாமளும் இதே மாதிரிதானே போட்டுக்கிட்டு வர்ரம்.


RAAJ
மே 01, 2024 14:26

யானைக்கும் அடி சறுக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை