உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மதுரோவை அமெரிக்கப் படை பிடித்தது எப்படி; வெளிவராத தகவல்கள்!

மதுரோவை அமெரிக்கப் படை பிடித்தது எப்படி; வெளிவராத தகவல்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

வெனிசுலா அதிபர் மதுரோ, நள்ளிரவில் அமெரிக்கப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், போதை கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு விசாரிக்கப்பட உள்ளார். அவரை, அமெரிக்க டெல்டா படையினர் எப்படி பிடித்தனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த சில மாதங்களாகவே இதற்காக திட்டமிட்ட அமெரிக்க கமாண்டோ படையினர், தங்கள் உளவாளிகள் மூலமாக, மதுரோவின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அவர் தங்கும் இடங்கள், அவற்றின் பாதுகாப்பு, பாதுகாவலர்கள், மதுரோவின் உணவு, உடைகள், உடன் இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உளவாளிகள் மூலம் அமெரிக்கப்படை சேகரித்து வைத்திருந்தது.

பல முறை ஒத்திகை

தாக்குதலுக்காக, ஒரு முறைக்கு பல முறை ஒத்திகையும் பார்த்து வைத்திருந்தனர். இதற்கென வெனிசுலா அதிபர் மாளிகை போலவே, ஒரு மாளிகையை உருவாக்கி, அதில் தினமும் ஒத்திகை பார்த்தனர்.தாக்குதல் நடத்த நேரத்தை குறித்ததும், அந்த நேரம் தலைநகர் கராகஸ் முழுவதும் மின் தடை ஏற்படுத்தியது அமெரிக்க ராணுவம். தங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, அமெரிக்க ராணுவம் இந்த செயலை செய்து முடித்ததாக பெருமையுடன் கூறினார் அதிபர் டிரம்ப்.

படுக்கை அறை

இப்படி இருள் சூழச்செய்யப்பட்ட நகரில், ஹெலிகாப்டர்களில் சென்று இறங்கினர், அமெரிக்க டெல்டா படையினர், எலைட் கமாண்டோக்கள் மற்றும் சிஐஏ, எப்பிஐ உளவாளிகள். இரும்புக்கதவுகள் சூழ்ந்த ராணுவப் பாதுகாப்பில் இருந்த கோட்டையில் புகுந்த அமெரிக்க படை, பாதுகாவலர்களை சுட்டு வீழ்த்தியது. கடைசியில், தப்பிக்க வழியின்றி படுக்கை அறையினுள் இருந்த மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து வெளியே இழுத்து வந்தனர், அமெரிக்க படையினர்.

தடாலடி நடவடிக்கை

உடனடியாக, அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டரில் ஏற்றி அவர்களை போர்க்கப்பலுக்கு அழைத்து வந்தனர். ஒட்டு மொத்த நடவடிக்கையும் முடிந்த பிறகே, மதுரோவை கைது செய்த அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் டிரம்ப். இந்த தடாலடி நடவடிக்கை, ஒசாமா பின் லேடனை வீழ்த்த பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவம் புகுந்தது போன்றது என்று சர்வதேச வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

36 ஆண்டுக்கு பிறகு

கடந்த 36 ஆண்டுகளுக்கு முன், பனாமா நாட்டில் இதேபோன்ற தாக்குதலை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டது. அப்போது அதிபராக இருந்த மானுவேல் அன்டானியோ நொரீகாவை அமெரிக்கப்படையினர் முற்றுகையிட்டு கைது செய்தனர். அதேபோன்ற சம்பவம் தான் இப்போதும் நடந்துள்ளது; ஆனால், அதைக் காட்டிலும் கூடுதலான திட்டமிடலுடன் பெரிய அளவில் உயிர்ச்சேதம் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக, பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N Annamalai
ஜன 04, 2026 19:21

ஆகவே யார் பெட் ரூமிலும் நுழைந்து கைது செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லி இருக்கிறார்கள் .உசார் .


நிக்கோல்தாம்சன்
ஜன 04, 2026 17:04

அமேரிக்கா வீழும்போது உலகம் , குறிப்பாக ஜனநாயகம் விடியல் கண்டெடுக்கும்


Rathna
ஜன 04, 2026 16:14

மிக மோசமான உதாரணத்தை உலகம் முழுவதும் செய்கிறான். ஒரு நாட்டு அதிபரை கைது செய்ய அந்த நாட்டு கோர்ட்டுகளுக்கும், பதவி இறக்கம் செய்ய அந்த நாட்டு மக்களுக்கும் மட்டுமே உரிமை உண்டு. வெனிஸுவேலாவின் எண்ணெய் இருப்பு உலகத்திலேயே மிக அதிகம். அதை கைப்பற்ற நடக்கும் ட்ரம்பின் சூட்சியே இது. அமெரிக்கா, மூர்க்கங்களின் நாடுகளில் நடத்திய போர்களில் - ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், சிரியா, நல்ல மூர்க்கங்களின் ஆட்சியை கெடுத்து அங்கு உள்ள கொலைகார கூட்டங்களின் ஆட்சியை கொண்டு வந்தது. உதாரணமாக ஈராக் மற்றும் லிபியாவில் கிறிஸ்துவர்களும், ஆப்கானிஸ்தானில் ஹிந்துக்களும், சீக்கியர்களும் அமைதியாக வாழ்ந்தனர். அதை கெடுத்து குட்டி சுவராக்கி அந்த நாடுகளில் ISIS, Alqaeda தீவிரவாதத்தை உண்டாக்கி விட்டான் அமெரிக்கா.


Thirumal Kumaresan
ஜன 04, 2026 14:46

எப்படியான காரணம் இருந்தாலும் அமெரிக்காவின் செயல் தவறானதே, அவர்கள் தவறானவர்கள் என்றால் ஐநா மூலமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


Suppan
ஜன 04, 2026 15:52

ஐ நா ..?? ஹி ஹி அதெல்லாம் சும்மா. அமெரிக்காவுக்கு வெனிஸுலவின் எண்ணெய் உலகில் உள்ள 20% அங்குதான் உள்ளது , தங்கம் மற்ற தாதுக்கள் வேண்டும். பயங்கர அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்துள்ளது என்று ஈராக்கை தாக்கி அதன் எண்ணெய் வளத்தைக்கைப்பற்றினர். அப்படி எதுவும் அங்கு இருந்ததில்லை. அதே மாதிரி போதைப்பொருட்களை அமெரிக்காவுக்குக் கடத்துகிறது. அங்குள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வசதிகள் அமெரிக்காதான் அமைத்தது . ஆகவே அங்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் அமெரிக்காவுக்கே சொந்தம். அதாவது உங்களுக்கு ஒரு ஒப்பந்ததாரர் வீடு கட்டிக்கொடுத்து இந்த வீடு எனக்கே சொந்தம் என்று சொல்கிற மாதிரி. இந்த அடாவடிக் காரணங்களைக் காட்டி வெனிஸுலாவை ஆக்ரமித்து உள்ளது . வெனிஸுலாவை ஆண்டவர்களும் எண்ணெய் வளத்தைக் கருத்தில் கொண்டு சகட்டு மேனிக்கு உருப்படாத சோஷலிச கொளகைகளை முன்வைத்து தொழில்களை தேச உடைமை ஆக்கினார்கள். விளைவு தொழில்கள் சுணக்கம். அநேகமாக எல்லாப்பொருட்களையும் இறக்குமதி செய்தார்கள். விளைவு தொழில்கள் சுணக்கம். மக்கள் சோம்பேறிகள் ஆனார்கள் . விலைவாசி விண்ணை முட்டியது. கணக்கில்லாத கரன்சி அச்சடிப்பு. விலைவாசி வருடத்துக்கு 100% அதிகரிப்பு. மக்களும் கஷடப்படுகிறார்கள். எது எப்படியோ. அமெரிக்காவுக்கு அடுத்த அடிமை.


Govi
ஜன 04, 2026 14:35

அழிந்துவிடும் அமரிக்க வரைபடத்தில்


Seruvai
ஜன 04, 2026 14:26

இறையாண்மை என்பது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகில் அரசுகளை செயல்படுத்தும் அத்தனை நாடுகளுக்கும் பொருந்தும். பலவீனமான பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட வெனிசுலா நாட்டின் அதிபரை அத்துமீறி கைதுசெய்துள்ள அமெரிக்க அரசின் ஆதிக்க செயல்பாடுகள் போற்றும்படி இல்லை. காலங்காலமாக தன்னுடைய வரலாற்றுப் பிழைகளை தீவிரமாக செய்துவரும் அமெரிக்க அதிபர்மார்கள் என்றாவது ஒருநாள் இப்படியாக கைதுசெய்யப்பட்டு அவமானப்படுவார்கள்.


SUBBU,MADURAI
ஜன 04, 2026 14:25

இந்த தொழில்நுட்ப கருவிகள் எல்லாவற்றையும் விட அமெரிக்காவிடம் இரவில் வீட்டின் சுவற்றுக்கு உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்க்கும் அதிநவீன கேமரா உள்ளது அதை வைத்துதான் நிக்கோலஸ் மதுரோவினை துல்லியமாக தூக்கி இருக்கிறார்கள். இதே போல்தான் மே 2, 2011 அன்று அமெரிக்க அதிரடிப்படை பாகிஸ்தானின் Abbottabad ல் ஒளிந்திருந்த ஒசாமா பின்லேடனையும் தூக்கியது.


SUBBU,MADURAI
ஜன 04, 2026 14:08

NYC Mayor Zohran Mamdani is very angry that Maduro has been arrested and says he called Trump to register his full opposition. I made it very clear and told him that I am against what he did. Who does he think he is?