உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனா, ரஷ்யா அதிபர்களுடன் மோடி சந்திப்பு; பொறாமையில் பொங்குகிறார் டிரம்ப் ஆலோசகர்

சீனா, ரஷ்யா அதிபர்களுடன் மோடி சந்திப்பு; பொறாமையில் பொங்குகிறார் டிரம்ப் ஆலோசகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் சீனா அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசியது, அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் மத்தியில் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருப்பது அவர்களது கருத்துக்களில் இருந்து தெரிய வந்துள்ளது. சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்தார். ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை எதிரொலியாக இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jnddnhpz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. உலகத்தின் அனைத்து முன்னணி ஊடகங்களும் இந்த மூன்று தலைவர்களும் சந்தித்து பேசியதை இன்று முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளன. மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டில்லி திரும்பிவிட்ட நிலையில், ரஷ்ய அதிபர் புடின் உடனான சந்திப்பை அமெரிக்கா விமர்சித்துள்ளது. இந்தியா எங்களுடன் தான் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவ்ரோ கூறி உள்ளார்.வாஷிங்டனில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது; இந்தியாவுக்கு ரஷ்யா தேவை அல்ல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் நாடுகள் தான் தேவை. மாஸ்கோவில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் பெறுவதை இந்தியா நிறுத்த வேண்டும். உலகின் பெரிய ஜனநாயக தலைவராக, இரு பெரும் சர்வாதிகாரிகளான புடின், ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி உறவை பேணியிருப்பது வெட்கக்கேடானது. அந்த சந்திப்பு தவறு. அவருக்கு நாங்கள் தான் தேவை, ரஷ்யா அல்ல என்பதை உணருவார் என்று நம்புகிறோம். ஜி ஜின்பிங், புடினுடான சந்திப்பில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் (பிரதமர் மோடி) என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு பீட்டர் நவ்ரோ விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

V.Mohan
செப் 03, 2025 08:24

இந்த அமெரிக்கர்களின் ஒரு சாரார் ஜனநாயகக்கட்சி என்று கூறிக் கொண்டு உக்ரைனை தூண்டி விட்டு நேட்டோ அமைப்பில் சேர்த்ததால், ரஷ்யா தனது நாட்டுக்கு நேட்டோ நாடுகள் அமெரிக்கா தலைமையில் அச்சுறுத்தல் தரும் என்று நினைத்ததால் உக்ரைனை மிரட்ட, உக்ரைன் தேவையின்றி போரில் மாட்டியது. இதில் அமெரிக்கா சரியென்றோ ரஷ்யா சரி என்றோ சொல்ல இயலாது. எனவே இந்தியா போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தது. டிரம்ப்பின் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரைனை நேடோவிலிருந்து விடுவித்திருந்தால் போர் முடிந்திருக்கும். ஆனால் டிரம்ப் செய்யவில்லை.. டிரம்ப்புக்கும் ரஷ்யாவை மிரட்ட உக்ரைன் போர் தேவை. ஆக கூடி உங்க சவுகரியத்துக்கும் தேவைக்கும் அமெரிக்க என்ன வேணா பண்ணலாம். ஆனா இந்நியா தங்கள் மக்களின் தேவைக்காக கம்மி விலையில் கிடைக்கிற கச்சா எண்ணெய் வாங்கினா உங்களுக்கு ஏன் எரியுது? உலகத்தின் சட்டாம்பிள்ளையாக முன்பு இருந்திருக்கலாம். இனி முடியாது. தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் இந்தியா முன்னேறுவதை டிரம்ப் கூட்டத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மதவாத,அடிப்படைவாத, தீவிரவாத எண்ணங்கள் கொண்டு அதனால் முன்னேறாத நாடுகள் தான் அமெரிக்காவுக்கு அடிபணியும். அம்மாதிரி நாடுகளை வைத்துக் கொண்டு விஷப்பரீட்சைகளில் இறங்கினால் அமெரிக்கா பேரும் கெடும், நாடும் கெடும்.. 7.8 பில்லியன் டாலர். மதிப்புள்ள அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் போனால், டிரில்லியன் டாலர் இலக்கு நோக்கி உள்ள இந்தியாவுக்கு வலிக்கும் உடைந்து விழாது


Saai Sundharamurthy AVK
செப் 02, 2025 23:17

இந்த ஆள், ராகுலகாந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருப்பார் போல் தெரிகிறது. இந்திய வளர்ச்சியை தடுக்கும் படியான டீப் ஸ்டேட் மற்றும் காங்கிரஸின் ஆலோசனைகளை அப்படியே டிரம்பின் மூளையில் புகுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். தவறான வழியை டிரம்பருக்கு காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இல்லையெனில் தேவையில்லாமல் திராவிட மாடலைப் போன்று பிராமணர்களை இழுத்து பேசியிருக்கமாட்டார். நாகரீகம் தெரியாமல் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார். சந்தேகம் காங்கிரஸ் கட்சி மீது உள்ளது.


பேசும் தமிழன்
செப் 02, 2025 18:26

இவன் தான் டிரம்ப் அவர்களுக்கு தவறான ஆலோசனை கூறி இருப்பான் போல் தெரிகிறது.... எல்லாம் நன்மைக்கே.... அமெரிக்கா டாலருக்கு சாவு மணி அடிக்கும் நேரம் வந்து விட்டது.... பிரிக்ஸ் அமைப்பு மூலம் இந்தியா அதை செய்து முடிக்கும்..... ஜெய்ஹிந்த்


K.n. Dhasarathan
செப் 02, 2025 17:24

அமெரிக்காவில் கோமாளிகள் கூட்டம் அதிகமாகிவிட்டது, அவர்களின் உளறல்கள் சகிக்க முடியவில்லை, கூடிய சீக்கிரம் மனா நல ஆசுபத்திரியில் சேர்க்க வேண்டியதுதான், பாவம் அமெரிக்க மக்கள்


sankaranarayanan
செப் 02, 2025 17:17

உன்னை நம்பும் படி நீ நடந்து கொள்ளவில்லையே என்ன செய்வது தும்பை விட்டு விட்டு வாலைப்பிடிக்கிறாயே இனியாவது அமைதியை விரும்பும் இந்திய பிரதமரை வெறுக்காதே இந்தியாவை சீண்டாதே. இப்போதும் ஒன்றும் மோசம் போயிடவில்லைனு முன்பு இருந்ததுபோன்றே இந்தியாமீது எல்லா வரிகளையும் பழைய முறைக்கு அமல்படுத்து பார் எங்களது பிரதமை நன்றி மறக்காதவர் நாணயம் உள்ளவர் நம்பக்கூடியவர் நல்லவர் அவரை வெறுக்காதே அடிக்காதே


Asagh busagh
செப் 02, 2025 15:55

டிரம்ப்பும் சர்வதிகாரி தான். யுக்கிரைனை புடின் எடுத்துக்க டீல் அலாஸ்காவுல போட்டுடார். இன்னும் தன் குடும்பத்திற்கு ஏற்ற விலை படியாதால இழுத்தடிக்கிறார். இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை தான். ஆனால் டிரம்ப் தேவை இல்லை. பாவம் மோடி, இவ்வளவு நாள் இந்தியாவில மட்டும் தான் குடும்ப அரசியல் ஊழல்வாதிகளை எதிர்தார், இப்போ சர்வதேச அளவுக்கு எதிர்க்க வேண்டிய கட்டாயம்.


Ganapathy
செப் 02, 2025 15:33

உனக்கேண் எரியுது?


ராமகிருஷ்ணன்
செப் 02, 2025 15:13

இந்தியா என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்று சொல்ல நீங்கள் யார், உங்கள் நாட்டை பாருங்க இந்திய பிரச்சனைகள் உங்களுக்கு தேவையில்லை. அமெரிக்கா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொன்னா நீங்கள் எடுத்துக் கொள்வீர்களா


ராமகிருஷ்ணன்
செப் 02, 2025 15:08

அமெரிக்கா ஏன் ஊரான் காசை நம்பி வாழுது, அவ்வளவு கடன், காசு வரவில்லை என்றால் அமெரிக்கா பொழப்பில் மண்ணுதான், சேர்த்து வச்சு உள்ள காசு, பணத்தை திங்க முடியாது


Iyer
செப் 02, 2025 15:04

ஆப்கானிஸ்தான் , வியட்நாம் போன்ற சிறு நாடுகளையே சமாளிக்க முடியாத நீ - பாரதம் போன்ற வல்லரசுடன் - அதுவும் மோதி போன்ற தலைவர் ஆளும் நாட்டுடன் - மோதிப்பார்கலாமா தம்பி ? அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறினால் அமெரிக்கா முழுவதும் சிதைந்துவிடும் - தெரிந்துகொள்


புதிய வீடியோ