உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்; ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்; ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

டோக்கியோ: உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஜப்பானின் டோக்கியோவில், இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். ராணுவம், விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியாவில் பொருளாதாரம், அரசியலில் நிலைத்தன்மை நிலவுகிறது. இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நாடு. ஜப்பான் நாட்டின் வணிகத்திற்கு இந்தியா ஊக்கமளித்து வருகிறது. ஏஐ, செமி கண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக் மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றில் இந்தியா துணிச்சலான பல முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.

13 பில்லியன் டாலர்கள்

இந்தியா பொருளாதாரம் நிலையாக உள்ளது. ராணுவம், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. மெட்ரோ முதல் புல்லட் ரயில் வரை ஜப்பானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது. ஜப்பானை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

முதலீடு செய்யுங்கள்

இந்தியாவின் மெட்ரோ முதல் செமிகண்டக்டர் வரை பல்வேறு துறைகளில் ஜப்பான் முக்கிய பங்காற்றி வருகிறது. குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே பல ஜப்பானிய வணிக தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகள் இருந்தது. இந்தியாவில் ஏராளமான தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய வேண்டும். உலகிற்காக உற்பத்தி செய்யுங்கள். இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sankar
ஆக 30, 2025 02:28

முன்னாள் ஜப்பான் துணை அதிபர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடே பெற ஜப்பான் போவார் உலகெண்டும் ஓடி முதலீடே கொண்டு வர நான் தயார் கொண்டு வர கப்பல்கள் உலகில் இல்லை என்னவெய் 2026 எலேகிஷன் முடிந்தவுடன் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் கப்பல்கள் கட்டப்படும் அதன் முள்ளம் 50 லட்சம் தமிழர்களுக்கு வேலை கிடைக்கப்படும் கொடுக்க படும் செய்ய படும் . வாயை தொறந்து வானை பார்த்து காத்திருங்கள் திராவிட கண்மணிகளே


Narayanan Muthu
ஆக 29, 2025 19:40

பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை அதற்க்கான வாய்ப்பே இல்லை. இந்தியா மீதான பிஜேபியின் கடன் சுமை ஒன்றே போதும் அனைத்தையும் கீழ் நோக்கி இழுக்க.


Rathna
ஆக 29, 2025 18:16

டாடா, பிர்லா, ரிலையன்ஸ், அதானி, மாருதி, L&T, போன்ற பல 100 நிறுவனங்கள் உலக நிறுவனங்களாக வளர்ந்து வருகின்றன. 1 லக்ஷம் கோடி GST வரி குறைப்பு மற்றும் 1 லக்ஷம் கோடி IT வரி குறைப்பு போன்ற நல்ல திட்டங்கள் இந்திய வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். ai, மற்றும் IT துறைகளின் வளர்ச்சி ஆசிரியப்படும்படி உள்ளது. Advanced manufacturing துறைகளில் ஜப்பான், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் கூட்டணி நல்ல பொருளாதார முன்னேற்றத்தை, வேலை வாய்ப்புகளை உண்டாக்கி உள்ளது. மொபைல் போன், ஆப்பிள் போன், எலக்ட்ரிகல் டிவி, பிரிட்ஜ் ஏற்றுமதியில் உலக அளவில் இந்திய முதலாவது நாடாக மாறி உள்ளது. சுசூகி நிறுவனம் EV கார்கள் 100000 எண்ணிக்கையில் உலகம் முழுவது ஏற்றுமதி செய்கிறது. இந்த வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட துணிச்சனாலான அரசியல் முடிவுகளால் நடந்தது. அமெரிக்கா அதிபரின் மிரட்டல் நடவடிக்கைகள் கனடாவை, கிரீன்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளை போல் இல்லாமல் நாம் துணிச்சலாக இருப்பது நல்ல நடவடிக்கையே. இந்தியாவின் நீண்ட காலத்து வளர்ச்சியை பொறுக்காத அமெரிக்கா, தனது வரிகள் மூலமாக தனக்கு தகுந்த ஒரு அரசியல் மாற்றத்தை இந்தியாவில் கொண்டு வர நினைக்கிறது. அது நடக்காது என்பதே உண்மை.


GMM
ஆக 29, 2025 15:43

இந்தியாவில் பொருளாதார நிலைத்தன்மை நிலவ மக்கள் சேமிப்பு, மாநில, நீதிமன்ற நடவடிக்கை பொருளாதார முன்னுரிமை நோக்கி இருக்க வேண்டும். அரசியலில் நிலைத் தன்மை பெற தேர்தல் ஆணையம் அதிக அதிகாரம் பெற வேண்டும். நீதிமன்ற அதிகாரம் நிர்வாகத்தை முடக்கி வருகிறது. மத்திய அரசு கவனிக்க வேண்டும். அதிக, குறைந்த வாக்கு ratio நிர்ணயிக்க வேண்டும். இது வெற்றியை தீர்மானிக்க விடாது. மற்ற நாடுகளில் ஒரே மதம் அல்லது கம்யூனிசம். அங்கு அதிக வாக்கு முறை சரி. இந்தியாவில் சரி வராது. உலகில் இந்தியா எப்போதும் மிகவும் நம்பிக்கைக்குரிய நாடு. அந்நியர் ஆக்கிரமிப்பிற்கு முன் பெரிய பொருளாதார நாடு தான். இராணுவ வீரர்கள் பாதுகாப்பு தான் பொருளாதாரம் காக்கும்.


babu
ஆக 29, 2025 14:31

ஜப்பான் வடை...


Venkatesh
ஆக 29, 2025 19:48

உங்க மாடல் மாதிரியே எல்லாரையும் நினைக்காதே......


sankar
ஆக 29, 2025 20:03

11ம் இடத்தில இருந்து நான்காம் இடம் இந்தியாய் வந்து விட்டது. எல்லாம் துபாயிலிருந்து முதலீடு வருது என்று முதல்வர் சுட்டது


திகழ்ஓவியன்
ஆக 29, 2025 13:03

விருது வாங்க உலகம் சுற்றும் தலைவர்


vivek
ஆக 29, 2025 13:47

நம்புங்க அப்பு... தமிழ்நாட்டுக்கு பத்து லட்சம் கோடி.....இங்கே ஒரு உலகமாக உருட்டு. ஹி ஹி


திகழ்ஓவியன்
ஆக 29, 2025 12:18

ஆபரேஷன் சிந்​தூரின் போது, இந்​திய - பாகிஸ்​தான் இடையே அணுஆ​யுத போராக மாறு​வதாக இருந்​தது. அதை நான்​தான் தடுத்​தேன் என்று ட்ரம்ப் கூறி வரு​கிறார். அத்​துடன், சர்​வ​தேச அளவில் 7 போர்​களை நிறுத்தி இருக்​கிறேன் என்​றும் ட்ரம்ப் கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் கூறி​னார். இந்​நிலை​யில், இந்​தியா - அமெரிக்கா இடையே வர்த்தக வரி தொடர்​பாக மோதல் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பிரதமர் மோடி பேச மறுத்​துள்​ள​தால், அதிபர் ட்ரம்ப் கடும் பதற்​ற​மாகி இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய கடிதம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அண்மையில் ரகசிய கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பு போரை, இந்தியாவும் சீனாவும் இணைந்து முறியடிப்பது தொடர்பான ஆலோசனைகளை அதிபர் ஜி ஜின்பிங் முன்மொழிந்து உள்ளார். உலகத்தின் நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ரகசிய கடிதத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இதைத் தொடர்ந்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். எல்லைப் பிரச்சினை காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தது. தற்போது தைவானை தவிர்த்து அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவைப் பேண சீனா முடிவு செய்திருக்கிறது. இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


திகழ்ஓவியன்
ஆக 29, 2025 12:09

எப்படி வரும் அமெரிக்கா சென்று பேச்சு வார்த்தை செயுங்கள் , அவர்கள் வரி யால் பங்களாதேஷ் 13%, பாகிஸ்தான் 16 % என்று அனால் நமக்கு 50 % இதை சரி செய்ய பாருங்கள் இல்லை என்றால் 40 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் இந்தியாவில் , நீங்கள் ரஷிய உங்கள் நண்பர் அதானி க்க சேயும் செயல் இந்தியாவையே பாதிக்கிறது . ரஷ்ய எண்ணெய்களால் ஏற்படும் லாபத்தைவிட அதிக வரிகளால் ஏற்படும் பாதிப்பைதான் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒரு சமநிலையான உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். ரஷ்யாவை மட்டுமே முழுமையாக நம்பாமல், பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விருப்பத்தை வைத்திருக்க வேண்டும். அது, எதிர்காலத்தில் எந்தவொரு உலகளாவிய அரசியல் அல்லது பொருளாதார நெருக்கடியையும் இந்தியா எதிர்கொள்ள உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகப்படியான லாபம் ஈட்டும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இங்கே உள்ளன. அவர்கள் இன்னும் அதே மாதிரியான அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறார்களா என்பதை அறிய வேண்டும். அப்படியிருந்தால், அந்த லாபத்தில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் அதிக வரியால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்காத வண்ணம் காக்கலாம்” என்றார் ரகுராம் ராஜன்.


vivek
ஆக 29, 2025 12:24

நீ அவருக்கு அண்டாவா ....போவியா


vivek
ஆக 29, 2025 12:25

கருத்து சொல்லும் உதவாகரைகள்


N Sasikumar Yadhav
ஆக 29, 2025 12:30

உலகம் பரந்து விரிந்து இருக்கிறது


மோகனசுந்தரம்
ஆக 29, 2025 12:38

திரு ரகுராம் ராஜன் அவர்கள் கூறியது எல்லாமே சரி என்று கூற முடியாது. நம்முடைய பாரத நாட்டில் உற்பத்தி துறையை விட சேவை துறை தான் மிகவும் நல்லது என்று கூறியவர். இன்று அந்த சேவை துறை ஒன்றையே பிடித்துக் கொண்டிருந்தால் நம்முடைய நாடு எப்படி போயிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 29, 2025 12:53

நீங்க எப்படி திமுக அடிமையா இருக்கிறீர்களோ அதைப்போல இந்தியாவையும் அமெரிக்கா அடிமையாக இருக்க சொல்கிறீரா ..அந்த காலம் மலையேறி போச்சு இந்த மாதிரி அட்வைஸெல்லாம் 2014க்கு முன்பு தேவைப்பட்டது. இப்பொழுது ஆள்வது உலகின் விஷ்வ குரு.. உன்னைவிட ஆயிரம் மடங்கு அறிவு அதிகம் அவருக்கு தெரியும் என்ன எப்படி எப்போது செய்யனும்னு.. ரகுராம் ராஜன் ஒரு காகித புலி அதனுடைய திறமை என்னன்னு தெரிஞ்சு ஓரங்கட்டியாச்சு அவரு கதையை தூக்கிட்டு வாராதீரு.....!!!


புதிய வீடியோ