உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல; தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் வெளிப்படை!

ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல; தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் வெளிப்படை!

ஜெருசலேம்: ஈரானில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டனர். ''இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bhx3cttx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர். 320க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் என ஈரானின் ஐ.நா., தூதர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: தீய மற்றும் அடக்குமுறை ஆட்சியிலிருந்து உங்கள் விடுதலைக்காக எழுந்து நின்று, மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில், உயர் ராணுவ தளபதிகள், மூத்த அணு விஞ்ஞானிகள், அணு ஆயுத உற்பத்தி மையங்கள் உள்ளிட்டவற்றை அழித்துள்ளோம். நேற்றும், இதற்கு முன்பும் பல முறை நான் கூறியது போல், இஸ்ரேலின் போராட்டம் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல. எங்கள் போராட்டம் உங்களை ஒடுக்கி வறுமையில் ஆழ்த்தும் ஆட்சிக்கு எதிரானது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். வரலாற்றின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றான ஆபரேஷன் ரைசிங் லயனின் நடுவில் நாங்கள் இருக்கிறோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உங்களை ஒடுக்கி வரும் ஆட்சி, இஸ்ரேல் அரசை அழிக்க அச்சுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.உதவி எண்கள் அறிவிப்புஈரானில் போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், ஈரான் வாழ் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. '' ஈரானில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின்+98 9128109115, +98 9128109109 என்ற அவசர எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SUBBU,MADURAI
ஜூன் 14, 2025 16:31

இஸ்ரேலின் தலைநகர் தற்போது மிக மோசமாக உள்ளது. இது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் பேரழிவிற்கு உள்ளானது. இஸ்ரேல் இதைவிட மோசமான முறையில் ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் என்பது தெளிவாகிறது, ஆனால் இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இதுபோன்ற எதையும் நாம் கண்டிருக்கிறோமா? நாம் ஒரு முழு அளவிலான போருக்குச் சென்றிருந்தால், இதுபோன்ற காட்சிகள் பல இந்திய நகரங்களுக்கு ஒரு கடுமையான யதார்த்தமாக மாறியிருக்கலாம். இன்று போர் நிறுத்தத்திற்காக பிரதமர் மோடியை ஏளனம் செய்து அவமதிப்பவர்கள் இங்கு இதுபோன்ற மிகப் பெரும் அழிவு நடந்திருந்தால் லட்சக் கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக அவரைக் குறை கூறும் அதே நபர்களாக இருப்பார்கள். இஸ்ரேல் ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒரு இலக்கு நடவடிக்கையை மேற்கொண்டது. ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு துல்லியமான மற்றும் சக்திவாய்ந்த பதில் இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும். ஆனால் போரை நிறுத்துவதின் மூலம் பேரழிவைத் தவிர்ப்பது கோழைத்தனம் அல்ல, குறிப்பாக நாம் ஏற்கனவே எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் போது தனிப்பட்ட முறையில் நானும் ஒரு முழு அளவிலான போரை விரும்பினேன் ஆனால் நடைமுறையில் நாம் நினைத்தால்140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு அதிவேகமாக வளரும் பொருளாதாரம். ஒரு பெரிய அளவிலான போர் பஞ்சம், பொருளாதார சரிவு மற்றும் குழப்பத்தைத் தூண்டும் அபாயம் உள்ளது. இஸ்ரேலின் மக்கள்தொகை மூன்று இந்திய நகரங்களை விடக் குறைவு, மேலும் அவர்களின் குடிமக்களில் பெரும்பாலோர் இடையூறுகளைத் தாங்கும் அளவுக்கு செல்வந்தர்கள் ஆனால் நாம் அந்த நிலையில் இல்லை.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஜூன் 14, 2025 16:09

அதை விட சிறிய நாடுகளும் பெரிய நாடுகளும் பக்கத்து நாடுகளுடன் அமைதியான முறையில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றன.


அப்பாவி
ஜூன் 14, 2025 15:38

இந்தப் பேச்சில் இண்ணும்.குறைச்சலில்லை. காசா வில் 55000 பேர் செத்தாங்களே அவிங்க மக்கள் இல்லையா? என்னிக்கி ஒரு நாடு பல நாடுகளோடு போராடுகிறதோ அது சீக்கிரம் காணாமப் போயிடும்.


Kasimani Baskaran
ஜூன் 14, 2025 08:02

அடிப்படைவாதம் தலையெடுத்து ஒரு நாடு கூட முன்னேறியது கிடையாது. சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்றவை அவற்றுக்கான நல்ல உதாரணம்.


S.L.Narasimman
ஜூன் 14, 2025 07:45

எப்படி ஒரு சிறிய நாடு தன்னை காட்டிலும் பத்து மடங்கு உள்ள பெரிய நாடுகளை சர்வசாதாரணமாக அடித்து தூக்குது. எல்லாம் உடம்பை நம்பாமல் மூளையை நம்புவதாக இருக்கும்.


நிவேதா
ஜூன் 14, 2025 15:51

ஹிட்லர் யூதர்களை துரத்தியபோது அவர்களை பிரிட்டிஷ் பாலஸ்தினத்தில் குடியேற்ற அமெரிக்கா உதவியது. அந்த பகுதியை இஸ்ரேல் என ஒரு நாடாக அறிவித்தது அமெரிக்கா. இதன் நோக்கமே அந்த பகுதியில் அனைத்தும் முஸ்லீம் நாடுகளாக இருந்ததால் அவர்களுக்கு தலை வலி உண்டாக்கும் எண்ணத்திலேயே. அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்கா. பாலஸ்தீனியர்கள் தான் அந்த நாட்டின் சொந்த காரர்கள். அமெரிக்காவின் சூழ்ச்சியால் மண்ணின் மைந்தர்கள் அகதியானார்கள். அகதிகள் மண்ணின் மைந்தார்களானார்கள். இன்றும் இஸ்ரேலை அடித்தால் அமெரிக்கா வரும். ஆனால் அமெரிக்காவை அடித்தால் யூதர்கள் ஏன் என கேட்க கூட வரமாட்டார்கள்


Arul
ஜூன் 14, 2025 07:17

நீ கலக்கு சித்தப்பா


Rajah
ஜூன் 14, 2025 08:47

திரு மூர்க்கன் அவர்களே உங்கள் கோபத்தை கன்னியமான முறையில் காட்டுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை.


SUBBU,MADURAI
ஜூன் 14, 2025 16:38

இதிலிருந்து என்ன தெரிகிறது மூர்க்கன் என்பவர் வந்தேறிகளுக்கு பிறந்த மூர்க்கன் என்பது தெளிவாகிறது ஏலே மூர்க்கா தைரியமா ஒரிஜினல் பேர்ல கருத்தை போடு அப்படி இல்லாவிட்டால் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு ஓடி விடு...