உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெல்அவிவ்: இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடவடிக்கைகளில் பாலஸ்தீனர்கள் 18 பேரும், இஸ்ரேலியர்கள் 5 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகை சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம் தரப்பில், 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தெற்கு காசாவில் உள்ள கான் யூனிசிற்கு சென்றவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேரும், மேலும் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய காசாவில், ஒரு குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 72 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாசர் மருத்துவமனையிலும் நுசைராட்டில் உள்ள அவ்தா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூலை 09, 2025 04:09

சமாதானத்துக்கான நோபல் பரிசை இவர்களுக்கே கொடுக்கலாம். தீவிரவாதம் செய்யும் எவனும் இது போன்றதொரு வைத்தியத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 08, 2025 21:06

இஸ்ரேலியர்கள் ஐந்து பேர் இறப்பு..... சரிதான் இனி ஐந்தாயிரம் பாலிஸ்தீனியர்களை போட்டு தள்ளும் வரை நெதன்யாஹூ ஓயமாட்டார்.... இஸ்ரேலே சும்மா இருந்தாலும் இவர்கள் விடமாட்டார்கள் போல.....சொறிஞ்சி விட்டு உடம்பை புண்ணாக்கி கொள்கிறீர்கள்....!!!


Sudha
ஜூலை 08, 2025 20:10

சதி, எப்படி எண்ணுகிறார்கள்? யார் எண்ணுகிறார்கள்?


Sudha
ஜூலை 08, 2025 20:10

நோபல் பரிசு உறுதி


சமீபத்திய செய்தி