உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி

500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது, ஆச்சரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.கம்சட்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலையானது கடைசியாக 15ம் நூற்றாண்டில் தான் சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறியது. அதன்பின்னர் எரிமலையின் சீற்றம் குறைந்து அமைதியாக இருந்து வந்துள்ளது. இந் நிலையில், 500 ஆண்டுகள் கழித்து இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது. ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகை சூழ்ந்தது. எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு இதே கம்சட்காவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் நீட்சியே இது, மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pmsamy
ஆக 04, 2025 07:29

இயற்கையின் சீற்றத்துக்கு முன்னாள் விஞ்ஞான வளர்ச்சி கால் தூசி கூட பெறாது


Chaks
ஆக 03, 2025 19:59

once the volcano stops erupting, Trump would say, it's him who is the reason.


Nagarajan S
ஆக 03, 2025 19:56

ஏற்கனவே உக்ரைன் போரினால் ஏகப்பட்ட நஷ்டம். இப்போது பூகம்பம், எரிமலை வெடிப்பு இவைகளாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படுவதாலும் ரஷ்ய பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும்.


Jack
ஆக 03, 2025 15:54

டிரம்பு தான் கட்டுப்படுத்தனும்


புதிய வீடியோ