உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதிகள் தாக்குதல்: பாக்., ராணுவத்தினர் 11 பேர் பலி

பயங்கரவாதிகள் தாக்குதல்: பாக்., ராணுவத்தினர் 11 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராணுவத்தினர் 11 பேரும், பயங்கரவாதிகள் 19 பேரும் உயிரிழந்தனர்.வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி, அப்பகுதியில் பாக் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவத்தினர் 11 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என ராணுவத்தினர் தெரிவித்தனர்.பாகிஸ்தானில், குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து ஆதரிக்கும் பாகிஸ்தான், அதன் மோசமான பின்விளைவுகளை இப்பொழுது எதிர்கொள்வதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rathna
அக் 08, 2025 19:25

அவன் அழிவை அவனே தேடிக்கொள்ளுகிறான். இறைவனின் நீதி இதுவே.


MARUTHU PANDIAR
அக் 08, 2025 18:27

எங்களுக்கு வந்தாலும் ரத்தம் தான்னு புரிஞ்சுதாடா ? அமேரிக்கா "பயங்கரவாத தடுப்பு"க்குன்னு சொல்லி குடுத்து தள்ளிய அத்தனை லட்சம் டாலர் என்னாச்சு? எல்லோர்க்கும் தெரியும். இப்போ அனுபவி.


ராமகிருஷ்ணன்
அக் 08, 2025 15:51

ஆபரேஷன் சிந்துாரில் பாக்கிஸ்தான் அங்குள்ள பயங்கரவாதிகளை அழித்து கேவலமாக தோற்றதாலே கடுப்பாகி பாக் ராணுவத்தை போட்டு தள்ளிட்டாங்க. நல்லதே நடக்கும்.


Dv Nanru
அக் 08, 2025 15:29

விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்..எவ்வளவு அப்பாவி இந்தியர்களை கொன்று குவிச்சிங்க அதற்கெல்லாம் இது பதிலடி உங்க ஆளுங்களே உங்களுக்கு கொடுக்குறான்.. இது மட்டும் இல்ல இன்னும் பாகிஸ்தான் எவ்வளவோ அனுபவிக்க வேண்டியது இருக்கு இந்தியாவுக்கு எவ்வளவு கொடச்சல் குடுத்தீங்க கொஞ்சமா நெஞ்சமா..


KavikumarRam
அக் 08, 2025 15:07

தன்வினை தன்னைச்சுடும்.


கடல் நண்டு
அக் 08, 2025 14:57

விதை விதைத்தவன் வினை அறுப்பான் .. இன்னும் பல சம்பவங்களை மார்க்க நாடு அனுபவிக்க போகுது


வண்டு முருகன்
அக் 08, 2025 14:57

தன் வினை தன்னைச் சுடும் என்பது போல் அவர்கள் விதைத்த வினையை அவர்களே அனுபவிக்கின்றனர்


முக்கிய வீடியோ