கால்பந்து வீரர்களில் முதல் பில்லியனர்: வரலாறு படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
லிஸ்பன்: போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 40, ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலராக ( சுமார் 11 ஆயிரம் கோடிக்கு மேல்) அதிகரித்துள்ளது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுதி புரோ லீக் அணியான அல் நாசருடன் ஓப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டபோது இந்த பெருமை பெற்றுள்ளார். அதன் மதிப்பு 400 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும். மேலும் அர்மானி மற்றும் நைக் உடனான பிராண்ட் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதன் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.போர்ச்சுகல் அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களுடன் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.