வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. ஆனால் உள்நாட்டு தேசதுரோகிகளுக்கு இடம் கொடுத்து தவறு செய்து விட்டோமே ... அவர்கள் மீது எப்படியாப்பட்ட தாக்குதல் நடத்தலாம்?
கொலராடோ: நமது மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மத்திய அரசின் குழுவில் இடம்பெற்றுள்ள சசி தருர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்கமாவின் கொலராடோ மாகாணத்தின் பொல்டர் நகரில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது, பெட்ரோல் குண்டுகளுடன் நுழைந்த நபர் நடத்திய தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரிப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ள சசி தரூர் தலைமையிலான மத்திய அரசு குழுவினர், கொலரோடோ தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், 'கொலராடோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்த செய்தியை இந்திய எம்.பி.,க்கள் குழு கேள்விபட்டது. எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. நமது மண்ணில் பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியிடம் உறுதியாக தெரிவித்துள்ளோம்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. ஆனால் உள்நாட்டு தேசதுரோகிகளுக்கு இடம் கொடுத்து தவறு செய்து விட்டோமே ... அவர்கள் மீது எப்படியாப்பட்ட தாக்குதல் நடத்தலாம்?