உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை தடுக்காத நைஜீரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு

கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை தடுக்காத நைஜீரியா மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவதை அந்நாட்டு அரசு ஆதரிப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நைஜீரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை தயார்படுத்தும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழப்பு மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் சம எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு போகோ ஹராம், ஐ.எஸ்., அல் - குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகள், பண்டிட்ஸ் உள்ளிட்ட ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்படுகின்றன. இவர்கள் நைஜீரியாவின் பல்வேறு கிராமங்களுக்குள் நுழைந்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் இத்தகைய பயங்கரவாத குழுக்களின் தாக்குதலால் ராணுவத்தினர், பொதுமக்கள் என 2,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு ஜூலை வரையிலான ஏழு மாதங்களிலேயே பயங்கரவாத தாக்குதலால் 2,000க்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர். இந்நிலையில், 'நைஜீரிய அரசு கிறிஸ்துவர்களின் படுகொலைகளை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவில் லை' என, அமெரிக் க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நைஜீரிய அரசு கிறிஸ்துவர்கள் கொல்லப் படுவதை தொடர்ந்து அனுமதித்தால், நைஜீரியாவுக்கான அனைத்து உதவியையும் அமெரிக்கா உடனே நிறுத்தும். அந்நாட்டில் இந்த படுகொலைகளை நிகழ்த்தி கொண்டிருக்கும் முஸ்லிம் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வாய்ப்பும் எங்களுக்கு உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைக்கு தயாராக திட்டங்கள் தயார் செய்யும்படி போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். எச்சரிக்கை நாங்கள் தாக்குதல் நடத்தினால் அது அதிரடியாகவும், கொடியதாகவும் இருக்கும். எனவே நைஜீரிய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபு, “நை ஜீரிய அரசு நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரையும் பாதுகாப்பதில் அமெரிக்காவுடனும், சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயல்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
நவ 03, 2025 09:56

நைஜீரியாவில் கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நமத பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுவார் பாருங்கள்.


SUBBU,MADURAI
நவ 03, 2025 07:26

Christians are being massacred, and their women kidnapped, raped, and forcibly converted daily in Nigeria. This year, more Christians have been killed in Nigeria than Palestinians in Gaza. And yet, not a single protest for them!


Krishna
நவ 03, 2025 07:24

Kill Mercilessly All NonPlural NonAccomodative Monotheistic JihadiFundamentalist MassGenociders to Protect Humanity-World


ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 07:09

அச்சச்சோ, அப்போ நம்ம நாட்டுக்கும் ஆபத்தா?


GMM
நவ 03, 2025 07:04

அகிம்சை கொலை, ஆயுத கொலை என்ற இரு மத கொள்கை, வளங்கள் கொள்ளை அடிக்க மட்டும் தான். மத முகமூடி போட்டு கொள்ளும் ஆயுதம் ஏந்தும் எந்த குழுவாக இருந்தாலும் தாக்குதல் நடத்தி அழித்து மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்கா வகை வேண்டும். சீனா மத சிறையை ஏற்படுத்தி ஒடுக்கியது. இந்தியாவில் நக்சல்பாரிகள் ஒழிக்கப்பட்டு வருவது போல் உலகம் முழுவதும் ஆயுத குழுக்களை ஒழிக்க முடியும்.


சின்னப்பா
நவ 03, 2025 06:56

ட்ரம்ப் செய்யும் முதல் உருப்படியான காரியம்!


Ramesh Sargam
நவ 03, 2025 06:48

கிறிஸ்துவர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.


Ramesh Sargam
நவ 03, 2025 06:47

சதா சர்வகாலமும் எந்த நாட்டை தாக்கலாம், எந்த நாட்டுடன் போர் புரியலாம், எந்த நாட்டுக்கு அதிகவரி விதித்து துன்புறுத்தலாம் என்ற எண்ணம் கொண்ட இவருக்கு அந்த அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்திருந்தால் அதன் மதிப்பே போயிருக்கும் இந்நேரம். நல்லவேளை கொடுக்கவில்லை. தன்னுடை நாட்டு புழக்கடையில் தினம் தினம் நடக்கும் துப்பாக்கி சூட்டை நிறுத்த துப்பில்லாதவருக்கு அந்த அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்காமல் இருந்தது ரொம்ப நல்லதாப்போச்சு.


நிக்கோல்தாம்சன்
நவ 03, 2025 06:02

இருபெரும் மதங்களும் ஆதரிப்பது தீவிரவாதத்தை மாத்திரம் தான் . இயற்கையை நேசியுங்க என்றால் மதத்தை முன்னிறுத்தி பூமிப்பந்தை பாழடித்து கொண்டு , அடக்குமுறையை கட்டவிழ்த்துக்கொண்டிருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை