உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்

இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கெய்ரோ; இந்தியா சிறந்த நாடு, அந்நாட்டின் பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்று காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப், அப்தெல் பட்டா அல் சிசியுடன் துருக்கி அதிபர் எர்டோகன், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள ஷரத்துகள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவையும், பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். அவர் உரையாற்றும் போது பின்னால் பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நின்று கொண்டு இருந்தார்.டிரம்ப் பேசுகையில், இந்தியா மிகவும் சிறந்த நாடு. என் நல்ல நண்பர்கள் என்ற பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரதமர் மோடி. அவர் அற்புதமான ஒரு வேலையை செய்திருக்கிறார். பாகிஸ்தானும், இந்தியாவும் மிகவும் நன்றாக வாழப்போகிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே (பின்னால் நின்றிருக்கும் பாக். அதிபர் ஷெபாஸ் ஷெரிப்பை திரும்பி பார்க்கிறார் டிரம்ப்).என்னை பொறுத்தவரை அவர்கள் இருவரும் சிறந்த தலைவர்கள் என்று நினைக்கிறேன் என டிரம்ப் பேசினார். பின்னர் தொடர்ந்து உரையாற்றிய டிரம்ப், பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை கைகாட்டி, இந்தியா, பாக், அணுசக்தி மோதலை தடுத்ததற்கு அவரை பாராட்டினார். இந்த மனிதர் இல்லை என்றால், அந்த 4 நாட்களில் (ஆபரேஷன் சிந்தூர் பற்றி குறிப்பிடுகிறார்) என்ன நடந்தது என்று யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு போர்ச்சூழல் அதிகரித்து இருக்கும் என்றும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

krishna
அக் 15, 2025 12:02

சம்பந்தபட்ட நாடும், ஹமாஸ் அமைப்பும் கையெழுத்து இடாமல் என்ன ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம். நோபல் பரிசு அறிவிக்கும் முன்பே இந்த ஒப்பந்தம் செய்திருந்தால் ஒரு வேளை கொடுத்திருக்கலாமோ என்னவோ. வின்சியிடமோ அப்பாவிடமோ பெரியண்ணன் பேசியிருக்கலாம்.ஹாஹாஹா


Ramesh Sargam
அக் 15, 2025 11:36

இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி என் சிறந்த நண்பர்: காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப். இப்ப எதுக்கு இந்த ஐஸ்? நோபல் பரிசு நாங்கள் கொடுப்பதில்லை. மேலும் அதற்கு சிபாரிசும் செய்யமுடியாது. ஏன் என்றால் அது வேறு நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.


ஆரூர் ரங்
அக் 14, 2025 18:56

பாகிஸ்தான்ல அணு ஆயுதங்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டிலுள்ளன என்று பலரும் நம்புகின்றனர். அமெரிக்காவின் உத்தரவில்லாமல் அவற்றை ஏவமாட்டார்கள்.


Yasararafath
அக் 14, 2025 17:34

டொனால்ட் டிரம்ப் ஒரு சிறந்த தலைவர்.


Subburamu K
அக் 14, 2025 17:32

Being a enemy to Trump is more safe than Friend to this mentally unstable person. USA is not a reliable country to India. Trump will be a good friend to terrorists and not to us


Rathna
அக் 14, 2025 17:02

ஹமாஸ் என்னும் தீவிரவாதி இயக்கம் ஈரான், கத்தார், சவூதி, மத நன்கொடையாளர்கள் ஆகியவர்களிடம் இருந்து வருடம் பல ஆயிரம் கோடி பணம் பெறுகிறது. அப்பாவி காசா மக்களை முன்னால் நிறுத்தி, இஸ்ரேலிய அப்பாவி மக்களை கொல்லும் இயக்கம். நம்முடைய சேட்டனுடைய நாட்டில் இவர்களுடன் சிலருக்கு தொடர்பு உள்ளது. அப்படிப்பட்டவன் எப்படி சும்மா இருப்பான். இன்னும் ஒரு வருடத்தில் இஸ்ரேலை மீண்டும் தங்குவான். 1400 வருடம் இன மற்றும் மத சண்டை. எப்படி நிறுத்துவான்? அதுதான் அவனுங்க ரத்தத்திலேயே ஊறி போயுள்ளதே.


Anand
அக் 14, 2025 15:43

காசா உச்சி மாநாட்டில் அதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளி இஸ்ரேல் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை, கையெழுத்திடவும் இல்லை, பிறகு எப்படி அமைதி ஒப்பந்தம்? இன்று கூட இரண்டு பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றிருப்பதாக செய்தி, மேலும் இறந்த பிணையக்கைதிகளின் உடல்களை ஒப்படைக்க இஸ்ரேல் ஹமாஸுக்கு கெடு விடுத்துள்ளது... அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பாப்போம்.


ஆரூர் ரங்
அக் 14, 2025 15:21

செல்லூராரே தேவலாம். பப்பு பொறாமைப்படுகிறார்.


RAMAKRISHNAN NATESAN
அக் 14, 2025 15:00

இறுதிப்பத்தியை நன்கு படித்தால் புரியும் ...... அதாவது பாகிஸ்தான் அணுவாயுதப் போரை மேற்கொள்ளாமல் பெரிய போரைத் தவிர்த்துவிட்டது என்கிறார் ...


KRISHNAN R
அக் 14, 2025 14:19

கம்பி கட்டும் வேலை


புதிய வீடியோ