உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்துக்கு குறி; தொடரும் டிரம்பின் மிரட்டல்

இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்துக்கு குறி; தொடரும் டிரம்பின் மிரட்டல்

வாஷிங்டன்: ''ரஷ்யாவுடன் இந்தியா என்ன வர்த்தகம் செய்கிறது என்பதை பற்றி கவலையில்லை. ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவ் மிக மோசமான விவகாரத்திற்குள் நுழைகிறார்.'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.நாளை முதல், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 31) அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவுடன் இந்தியா என்ன வர்த்தகம் செய்கிறது என்பதை பற்றி கவலையில்லை. இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மேலும் கீழே கொண்டு செல்லட்டும். இந்தியாவுடன் அமெரிக்கா மிக குறைவான வர்த்தகமே செய்கிறது. இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதேபோல், ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து கிட்டத்தட்ட எந்த வணிகத்தையும் செய்யவில்லை. அதை அப்படியே இருக்கட்டும்.மேலும் தான் இன்னும் அதிபர் என்று நினைக்கும் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவ் மிக மோசமான விவகாரத்திற்குள் நுழைகிறார். அவர் தனது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருட்படுத்தவில்லை

முன்னதாக, டிரம்ப் புதிதாக விதித்து வரும் வரி விதிப்பு குறித்து, ரஷ்யா முன்னாள் அதிபர் மெட்விதேவ் கூறியதாவது: அதிபர் டிரம்ப் ரஷ்யாவுக்கு எச்சரிக்கையை விடுத்தார். இதன் விளைவுகளை எதிர்பார்த்து உலகம் நடுங்கியது. போர்க்குணமிக்க ஐரோப்பா ஏமாற்றமடைந்தது. ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை.அதிபர் டிரம்ப் ரஷ்யாவுடன் விளையாட முயற்சிக்கிறார். ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தலாகவும் போரை நோக்கிய ஒரு படியாகவும் உள்ளது. இவ்வாறு மெட்விதேவ் கூறியிருந்தார். மெட்விதேவ் வெளியிட்டுள்ள, இந்த பதிவிற்கு தான் இன்று டிரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பெரிய குத்தூசி
ஜூலை 31, 2025 18:51

ட்ரம்ப் பின் ஆட்டம் பிரதமர் மோடியிடம் செல்லாது. ட்ரம்ப் 100 சதவிகிதம் வரியை இந்தியாவிற்கு போட்டாலும் ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை. ஏன் இந்த ட்ரம்ப் தவளை தேவை இல்லாமல் சத்தம் போடுகிறது. ட்ரம்ப் கூவுவதால் இந்தியா பயப்படாது என்பது அமெரிக்கா அரசுக்கு நன்கு தெரியும். தெலுங்குதேச MP கலை அமெரிக்கா CIA விலைக்கு வாங்கி மோடி அரசை கவிழ்க்க திட்டமிட்டது. மோடி அதை முறியடித்து விட்டார். அமெரிக்கா CIA வேறு நரிவேலைகளை செய்து மோடி அரசை கவிழ்க்க சதி செய்வார்கள். பிரதமர் மோடியுடன் தேசப்பற்று அதிகாரிகள் , அமைச்சர்கள் இருக்கும் வரை அமெரிக்கா இந்தியாவின் ஒரு கூந்தல் இழையை கூட தொட முடியாது.


Rathna
ஜூலை 31, 2025 18:25

நாகரீகம் இல்லாத அரசியல் செய்கிறார். பாகிஸ்தானுடன் தனிப்பட்ட நலத்திற்காக கூட்டணி அமைத்து, நாட்பட்ட நட்பை முதுகில் குத்துகிறார்.


naranam
ஜூலை 31, 2025 17:12

அமெரிக்கா அதிபர் சசி தரூரின் கருத்துக்களை சற்று படிக்க வேண்டும். உலகமே தன்னுடைய சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்று டிரம்ப் நினைப்பது அவருடைய ஆணவத்தின் உச்ச கட்டம். ஆனால் இந்தியாவின் பொருளாதாரத்தை குலைக்க நினைக்கும் டிரம்பின் முயற்சியை பிரதமர் மோடி நிச்சயம் முறியடிப்பார்.


Subburamu Krishnasamy
ஜூலை 31, 2025 15:22

He will surrender to Modiji very soon He is an inconsistent leader. Loose his popularity by opposing India


M. PALANIAPPAN, KERALA
ஜூலை 31, 2025 14:28

தினமும் எதாவது குண்டு வீசும் டிரம்ப், பொருளாதார வீழ்ச்சி அடைந்த இந்தியா மற்றும் ரஷிய மேலும் வீழ்ச்சி அடைய சாபம் விடும் டிரம்ப், உலகிலேயே மிகவும் அதிகமாக வரி விதிக்கும் நாடு இந்தியா என்கின்ற குற்றச்சாட்டு


Balaji
ஜூலை 31, 2025 14:12

அமெரிக்காவில் இப்போது நடப்பது துக்லக் ஆட்சி. பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் யோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு. இதில் முதலில் பாதிக்க பட போவது அமெரிக்கா மக்கள் தான் . பாதிக்கப்பட்டவுடன் இந்த முடிவை மாற்றுவார்கள். இதற்கு முன்னரும் நிறைய மாற்றி இருக்கிறார்கள். அமெரிக்கா எப்போதுமே நமக்கு உண்மையான நட்பு நாடு கிடையாது.


Madras Madra
ஜூலை 31, 2025 14:05

அமெரிக்காவின் பல கம்பெனிகள் இந்திய IT backend operationsai நம்பி உள்ளது இவர் பேச்சை அமெரிக்கா கம்பெனிகள் எதுவும் கேட்க போவது இல்லை இந்தியாவும் அமெரிக்காவை நம்பி இல்லை


SUBRAMANIAN P
ஜூலை 31, 2025 13:49

ஆட்சியை ஒரு கிறுக்கன் கையில குடுத்ததுக்கு அமெரிக்கா மக்கள் ஓரிரு வருடங்களில் வருத்தப்படப்போகிறார்கள். இஷ்டத்துக்கு என்னென்னல்லாமோ செய்யுறான். அமெரிக்கா என்ற வல்லரசு பிம்பம் உடைந்து சின்னாபின்னமாகப்போகிறது. இவன் சுட்டுத் தள்ளப்படுவான்.


ஆரூர் ரங்
ஜூலை 31, 2025 13:29

நட்புறவை உருவாக்குவது கடினம். ஆனால் பகையை வளர்த்துக் கொள்ளுவது எளிது. டிரம்புக்கு இப்போ நண்பர்கள் குறைந்து எதிர்ப்பு வலுக்கிறது. பாவம் வாக்களித்த மக்கள்.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 13:17

Whether Trump will get the Nobel Peace Prize or not, I am sure he will get the Oscar Best Comedian Award. Good luck and all the very best DT.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை