உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் தாக்குதலை நிறுத்த ஐ.நா.,வில் தீர்மானம்

ஈரான் தாக்குதலை நிறுத்த ஐ.நா.,வில் தீர்மானம்

மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜி.சி.சி., எனப்படும் வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் சார்பில், பஹ்ரைன் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u3zqs5rw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரான் உடனடியாக அனைத்து தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களையும், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள தடைகளையும் நிறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல ஈரான் மூத்த அதிகாரிகள் கொல்லப் பட்டதைக் குறிப்பிடாததற்காக ரஷ்யாவும், சீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ