உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா விவகாரம்: அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் தீர்மானம்

காசா விவகாரம்: அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து வரும் வேளையில், இதற்கு மாற்றாக மற்றொரு வரைவு தீர்மானத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலும், ஹமாசும் பிணை கைதிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்து வருகின்றன.இந்நிலையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை செயல்படுத்துவது, காசாவின் பாதுகாப்பை உறுதி செய்வது, கூட்டு அமைதிப் படையை நிறுவுவது, அமெரிக்காவின் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக அமெரிக்காவின் மேற்பார்வையில் ஒரு நிர்வாகத்தை அமைப்பதும் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையே ரஷ்யா சார்பில் பாதுகாப்பு கவுன்சிலில் மற்றொரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நிர்வாக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப்படை ஐ.நா.,வின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும், மேற்கு கரையையும், காசாவையும் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு வரைவு தீர்மானங்களும், நாளை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்புக்கு வர உள்ளன. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில், குறைந்தது 9 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்களிடம் உள்ள 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்.வீட்டோ அதிகாரம் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, தனித்தனியாக வரைவு தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், இரண்டுமே நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது காசா சீரமைப்பு முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ASIATIC RAMESH
நவ 16, 2025 15:25

வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து.... ஏற்கனவே அமெரிக்கா ஐ நாவிற்கான பல்வேறு திட்டங்களுக்கான தனது நிதி பங்களிப்பை இந்த ட்ரம்பர் நிறுத்தியதாக சில மாதங்கள் முன் செய்தி. அப்புறம் எதற்கு மீண்டும் மீண்டும் உள்ளே வருகிறார் ?...


SUBBU,MADURAI
நவ 16, 2025 12:10

Florida imam: We have already converted 3 churches into mosques, and we are looking for more. One day, Florida will become Muslim. May Allah give victory to Islam in this country. Islamic scholar says that when Muslims take over America and the West, they will enslave non Muslims, make them work for them, and take everything from them. While the real threat is announcing its plans out loud, some people think Israel is the issue


ganeshan
நவ 16, 2025 10:18

பாதிக்கப்படுவது காசா மக்கள் தான் இவர்கள் ஆளுக்கு ஒவ்வொரு தீர்மான நிறைவேற்றி சண்டையை மூட்டி விட்டு மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்க வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது உலக நாடுகள் ஒன்றிணைந்து காசா மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல நாள் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை