உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் உடனான அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் பேச்சு தோல்வியில் முடிந்தது. மறுபக்கம் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க திட்டமிட்டது. அது எங்களை குறிவைக்கும்' என்று, இஸ்ரேல் கூறியது. இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அதில் அமெரிக்காவும் இணைந்தது.இந்தப் போரின் ஒரு பகுதியாக ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களான போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகியவற்றை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கின. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முன்பாகவே, 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு ஈரான் மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இருந்து, 10 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது ஈரான் அணு ஆயுத திட்டங்களை சீரமைத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே, ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டார். ஈரான் பார்லிமென்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஈரானின் இந்த செயல் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் கூறியதாவது; ஈரான் தனது போக்கை மாற்றி, அமைதி மற்றும் செழிப்பின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் இந்த நேரத்தில், அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வது ஏற்க முடியாதது. ஈரான் மேலும் தாமதமின்றி, முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அணுகுண்டுகள் இல்லாத ஒரே நாடாக, 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்த நாடு ஈரான் தான். ஈரான் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் தேவைப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் முழுமையாக பின்பற்ற வேண்டும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

syed syed
ஜூலை 03, 2025 18:32

ஈரான் சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒப்பந்தத்தில் கை எழுத்துட்டு அணு ஆயுதம் வைக்க கூடாது ஆனால் இஸ்ரேல் அந்த அமைப்பில் கை எழுத்து இடாமல் அணு ஆயுதம் வைக்கலாமா. ???? அப்போ அமைப்பில் இருந்து பிரயோஜனம் இல்லை சோ அதிலிருந்து வெளி வருவதே நல்லது. ...


djivagane
ஜூலை 03, 2025 12:07

இஸ்ரேல் அணுகுண்டு வெய்திருக்கும் பொழுது ஏன் ஈரான் வெய்திருக்கே கூடாது ??


M Ramachandran
ஜூலை 03, 2025 11:36

தனக்கு சம்பந்த மில்ல இடத்தில் நாட்டாமைய்ய பண்ணுவது இந்த பிற நாடுகளின் உழைய்யப்பில் தின்று கொழிக்கும் பெரியண்ணன்? ஆயுத கள்ள வியாபாரி


Tirunelveliகாரன்
ஜூலை 03, 2025 11:10

இதெல்லாம் அநியாயமாக தெரியவில்லையா? உங்களிடம் எல்லாம் இருக்கலாம் ஆனால் எதிரியிடம் எதுமே இருக்கக் கூடாது. நிராயுத பாணியாக ஒருவனை ஆக்கி விட்டு அவனை சேதப்படுத்துவது நியாயமா?


Jack
ஜூலை 03, 2025 10:39

வடகோரியா பகோடா காதர் நிறைய அணு ஆயுதம் வெச்சிருக்கார் ...அவர் கிட்ட ட்ரம்ப் வாலாட்டறதில்ல ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை