உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுப்போம்

இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுப்போம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளம் - இந்தியா இடையேயான உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என, அங்கு ஆட்சி அமைக்க உள்ள, ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சியின் தலைவர் ரபி லாமிச்சானே தெரிவித்து உள்ளார்.நம் அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆர்.எஸ்.பி., எனும் தேசிய சுதந்திர கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, அக்கட்சித் தலைவர் ரபி லாமிச்சானே, பிரதமர் வேட்பாளர் பாலேந்திர ஷா ஆகியோருக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.இதற்கு பதிலளித்து, ரபி லாமிச்சானே கூறி உள்ளதாவது: நேபாள மக்களின் ஜனநாயக ஆணையை அங்கீகரித்ததற்காகவும், தங்களின் அன்பான வாழ்த்துக்கும் நன்றி. ஆர்.எஸ்.பி., மற்றும் எங்கள் அரசு பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு உறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கும்.வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு எங்கள் கட்சி முன்னுரிமை அளிக்கும். கலாசார சுற்றுலா, எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி இரு நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதன் வாயிலாக இந்தியாவுடனான உறவு புதிய உயரங்களை எட்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ms Mahadevan Mahadevan
மார் 11, 2026 12:43

நல்ல எண்ணம் . இரு நாட்டு உறவு பிராந்தியத்துக்கு நன்மை விளையும்


தமிழன்
மார் 11, 2026 12:19

அவர்கள் புதுமுகமென்றாலும் தன் நாட்டுக்காக நாட்டின் பிரச்சனைகளுக்காக போராடினார்கள் . இங்கே???


Rathna
மார் 11, 2026 11:56

நேபாளத்தை ஹிந்து நாடு என்று பிரகடனம் செய்யுங்கள். இது தொப்புள் கோடி உறவு. பாக்கிஸ்தான் பங்களாதேஸ் உடன் உறவு கொண்டால் உங்கள் நாடே காலி. 100% பிச்சை காரண்டீ.


Anand
மார் 11, 2026 10:21

வாழ்த்துக்கள்.


Rajkumar R
மார் 11, 2026 16:32

வாழ்த்துக்கள்


Keshavan.J
மார் 11, 2026 10:18

அய்யயோ என்ன தம்பி இப்படி அறிவிச்சு INDI கூட்டணிக்கு அல்வா கொடுத்துட்டாயே. உன்னை போல ஜென் ஸி நம்பி இருந்த ராகுல் காந்திக்கு இவ்வளவு பெரிய ஆப்பு வச்சிட்டியே


Iyer
மார் 11, 2026 09:10

இந்தியாவுடன் நல்லுறவு கொண்டு செயல்பட்டால் அது உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் , நேபாள் நாட்டுக்கும் நல்லது. சீனாவோ அல்லது பங்களாதேஷுடனோ உறவு வைத்துக்கொண்டால் - உங்கள் நாட்டை ஆண்டியாக்கி பாக்கிஸ்தான் போல பிச்சைக்கார நாடாக்கிவிடுவார்கள்.


Mahesh Rajan
மார் 11, 2026 08:54

மிக நல்ல தொடக்கம். வாழ்க பாரதம், வாழ்க நேபாளம். வாழ்க இந்த நற்பு என்றென்றும்.


kulanthai kannan
மார் 11, 2026 08:50

ஒரு புது முகத்தின் வெற்றி, இங்கு தவெ.கவுக்கு உற்சாகம் அளிக்கும்


Thravisham
மார் 11, 2026 08:17

அண்டை நாடுகளுக்கும் புரிந்து விட்டது மஹான் மோடியின் பாரதமே நமக்கு உற்ற தோழன் என்று.


புதிய வீடியோ