உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திண்டிவனம் விநாயகர் கோவில் தெருவில் உள்ள கடைகள் எதிரில் கோடை வெயிலை சமாளிக்க கீற்று பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

26-04-2024 | 14:00


மேலும் இன்றைய போட்டோ

வெறிச்சோடியது...!விடுமுறை தினம் என்றாலே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படும் மகாளய அமாவாசை முன்னிட்டு அசைவ பிரியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

21-09-2025 | 12:51


புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

21-09-2025 | 12:50


உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலித்தனர்.

21-09-2025 | 12:48


திருப்பூர், நஞ்சராயன் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

21-09-2025 | 07:43


எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இது போன்றவர்களை என்ன செய்வது... சென்னை மந்தைவெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பள்ளி சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.

21-09-2025 | 07:42


பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.

21-09-2025 | 07:08


கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து பாயும் அருவி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

21-09-2025 | 07:08


கிழக்காசிய நாடான தைவானில் நடக்கும் விமான மற்றும் ராணுவக் கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்தது இந்த பாராகுடா-500 என்ற ஏவுகணை.

21-09-2025 | 06:48


நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 22ல் துவங்குகிறது. அப்போது வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம். இதற்காக களிமண் விளக்குகளை தயார் செய்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட கலைஞர். இடம்: பிரயாக்ராஜ், உபி

21-09-2025 | 06:48