உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் 49 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் அமைச்சர் சிவசங்கர் பணி நியமன ஆணையை வழங்கினார். உடன் இடமிருந்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்.பி., சண்முகம், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஆகியோர்.

13-06-2024 | 14:55


மேலும் இன்றைய போட்டோ

கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

19-05-2026 | 15:48


சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

19-05-2026 | 15:46


வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.

19-05-2026 | 15:45


சில்லுனு ஒரு குளியல்: கோடை வெயிலுக்கு சில்லுனு குதூகலமாய் குளியல் போடும் கல்யாணி யானை. இடம்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குளியல் தொட்டி.

19-05-2026 | 15:42


புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் குறித்து, பயிற்சி கையேடுகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இடம்: டிபிஐ வளாகம் நுங்கம்பாக்கம்

19-05-2026 | 15:42


விழுப்புரம் நகராட்சி பூங்காவில் நடைபாதையில் மரம் விழுந்து பல மாதங்கள் ஆகியும் ஆற்றப்படாமல் உள்ளது.

19-05-2026 | 15:40


வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.

19-05-2026 | 15:40


ஆப்ரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பொது போக்குவரத்து துறையினர் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது சாலையில் டயர்களை போட்டு எரித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர்.

19-05-2026 | 06:36


பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

19-05-2026 | 06:36