உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பின் முதல் மாநாடு டீ சங்கத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு வீசேப் திட்ட இயக்குநர் பிரதாப் , பியோ தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பரமணியம், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளார் கோபாலகிருஷ்ணன், கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ, இடிஐ மண்டல இயக்குநர் ராணா அலோக் சிங் ஆகியோர உடனிருந்தனர்.

21-06-2024 | 13:33


மேலும் இன்றைய போட்டோ

மேற்காசிய போர் காரணமாக தொழிற்சாலை எரிவாயு மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால், குஜராத்தின் சூரத்தில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தனர்.

20-03-2026 | 08:28


மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடி பாட்வா என்ற பெயரில் மராத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடந்த விழாவில் மும்பையில் பாரம்பரிய நவ்வாரி புடவை மற்றும் ஆபரணங்கள் அணிந்து இருசக்கர வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்த பெண்.

20-03-2026 | 08:24


திருப்பூர், சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு - 2 மாணவர்கள் சார்பில் சட்டமன்ற தேர்தல் ஓட்டு பதிவு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நடந்தது. இதில் 100% வாக்களிப்பது குறித்த பஸ் பயணிக்களுக்கு அறிவுறுத்திய, கலெக்டர் மணீஸ் நாரணாவரே, மாநகராட்சி கமிஷனர் அமித்.

19-03-2026 | 23:05


திருவள்ளூரில் நேற்று இரவு திடீர் மழை பெய்ததால் மெய்யூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது

19-03-2026 | 23:04


விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசினார். அருகில் மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி.

19-03-2026 | 23:04


தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் சார்பில், அஸ்பையர் சுவாமிநாதன் எழுதிய இன்சைடு தி வார் ரூம் எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை, அமைச்சர் தியாகராஜன் வெளியிட எம்.பி., கார்த்திக் பெற்றுக்கொண்டார்.உடன், இடமிருந்து, அஸ்பையர் சுவாமிநாதன், தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இடம்: தி.நகர், சென்னை.

19-03-2026 | 23:03


சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் வாகனங்களை தீவிர சோதனை நடத்தினர் இடம்: தாம்பரம் வேளச்சேரி சாலை தாம்பரம்

19-03-2026 | 23:02


யுகாதி பண்டிகையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தில் ஸ்ரீராமர், லக்ஷ்மண். சீதா தேவியுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.

19-03-2026 | 23:01


திருநெல்வேலி, மூன்றடைப்பு அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் குவியலாக தேங்கிக் கிடக்கிறது.

19-03-2026 | 23:01