இன்றைய போட்டோ
நீர்வளத்துறைக்கு சொந்தமான 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாங்கல் ஏரி மேம்பாட்டு பணிகள் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்பு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.ஏரியை முழுவதும் தூர்வாரி அதனை சுற்றி நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் மற்றும் 2000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் ஏரியின் உள்ளே இரண்டு இடத்தில் அடர் வனம் அமைத்து பறவைகள் தீவாகவும் மாற்றப்பட உள்ளது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : சோழிங்கநல்லூர்.
25-06-2025 | 21:25
மேலும் இன்றைய போட்டோ
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
04-10-2025 | 20:35
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ள மண்.
04-10-2025 | 19:57
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை வெள்ளலூர் ஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள்.
04-10-2025 | 13:25
மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
04-10-2025 | 12:30
விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
04-10-2025 | 12:27