உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

நீர்வளத்துறைக்கு சொந்தமான 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாங்கல் ஏரி மேம்பாட்டு பணிகள் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்பு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.ஏரியை முழுவதும் தூர்வாரி அதனை சுற்றி நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் மற்றும் 2000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் ஏரியின் உள்ளே இரண்டு இடத்தில் அடர் வனம் அமைத்து பறவைகள் தீவாகவும் மாற்றப்பட உள்ளது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : சோழிங்கநல்லூர்.

25-06-2025 | 21:25


மேலும் இன்றைய போட்டோ

சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.

21-05-2026 | 18:44


விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.

21-05-2026 | 18:43


வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.

21-05-2026 | 18:42


சென்னை கார்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்ட அமைச்சர் மரிய வில்சனுக்கு கவர்னர் அர்லோக்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் உடன் முதல்வர் விஜய்.

21-05-2026 | 18:41


பனைமர ஓலையின் நுனியில் தனது மாளிகையை தானே நேர்த்தியாக கட்டும் தூக்கணாங்குருவிகள்.. இடம்: மணப்படைவீடு, திருநெல்வேலி..

21-05-2026 | 18:39


தாம்பரம் கிஷ்கிந்தா சாலை குறுகிய சாலையாக இருப்பதால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

21-05-2026 | 18:39


புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

21-05-2026 | 18:38


திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தென்படுகின்றன.

21-05-2026 | 18:38


கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது.

21-05-2026 | 15:59