இன்றைய போட்டோ
மீஞ்சூர் பேரூராட்சியின் அலட்சியத்தால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் செடிகள் வளர்ந்தும், ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தும், கால்வாய்கள் பராமரிப்பு இன்றி இருப்பதால், நிலத்தடி நீர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்கால திட்டமிடல் இல்லாமல் மெத்தனமாக இருக்கும் நிர்வாகத்தின் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
09-07-2025 | 03:15
மேலும் இன்றைய போட்டோ
சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.
21-05-2026 | 18:44
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
21-05-2026 | 18:43
வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.
21-05-2026 | 18:42
சென்னை கார்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்ட அமைச்சர் மரிய வில்சனுக்கு கவர்னர் அர்லோக்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் உடன் முதல்வர் விஜய்.
21-05-2026 | 18:41
பனைமர ஓலையின் நுனியில் தனது மாளிகையை தானே நேர்த்தியாக கட்டும் தூக்கணாங்குருவிகள்.. இடம்: மணப்படைவீடு, திருநெல்வேலி..
21-05-2026 | 18:39
தாம்பரம் கிஷ்கிந்தா சாலை குறுகிய சாலையாக இருப்பதால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
21-05-2026 | 18:39
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு கால தாமதம் ஆவதால், அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பயன்பாட்டிற்கு வராமல் சட்டசபை அருகில் உள்ள சர்க்கிள் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
21-05-2026 | 18:38