இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தின் கரை, சென்ற பருவ மழையின் போது சேதம் அடைந்தது .தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது
07-10-2025 | 19:33
சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் நிலத்தை உழுது போடும் பணி நடந்து வருகிறது.
07-10-2025 | 19:19
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் ,ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து நான்கு குடும்பங்கள் பூ எடுத்துச் செல்ல ஏதுவாக மூங்கில் கூடை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
07-10-2025 | 18:55
தேனி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடந்தது.
07-10-2025 | 16:49
திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பாமக தலைவர் அன்புமணி நேரில் பார்வையிட்டார்.
07-10-2025 | 16:44
வனப்பகுதியில் புதுசா ரிசார்ட் கட்டியிருக்கானு நினைச்சுக்காதீங்க, பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மண் குடிசையில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திருக்கு தமிழக அரசு. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.
07-10-2025 | 07:27
தாய்லாந்தின் சோன்புரியில் ஆண்டுதோறும் நடைபெறும் எருமை ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களது எருமைகளை வேகமாக ஓட்டிச் சென்றனர்.
07-10-2025 | 07:26