இன்றைய போட்டோ
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள புனித இடமான பிருந்தாவனத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி பண்டிகை தனித்துவம் வாய்ந்தது. இங்கு வசிக்கும் விதவையர் தங்கள் வாழ்வில் ஒளி வரட்டும் என்ற பிரார்த்தனை உடன் மண் விளக்குகள் ஏற்றி தீபாவளியை வரவேற்பர். அந்த வகையில் தீபம் ஏற்றி வரவேற்ற விதவையர்.
17-10-2025 | 07:13
மேலும் இன்றைய போட்டோ
துறைமுகத்தில் கலர்கலராய் கன்டெய்னர் டப்பாக்களை அடுக்கி வைத்துள்ளனரோ என்று கருத வேண்டாம். கட்டடங்களுக்கு மத்தியில் மீனாட்சி அம்மன் கோபுரங்களும், ஒத்தக்கடை யானைமலையும் ஒன்றாய் சேர்ந்து பருந்து பார்வையில் 'கண்ணுக்கு விருந்தாய்' கேமராவில் பதிவாகியுள்ளது. இடம்: மதுரை பசுமலை.
21-10-2025 | 08:02
தீபாவளியையொட்டி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மார்க்கெட்டில், பட்டாசு கடைகளில், ராணுவ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
21-10-2025 | 07:59
தீபாவளி பண்டிகையையொட்டி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மின் விளக்குகளால் ஜொலித்தது.
21-10-2025 | 07:57
தீபாவளி பண்டிகையான நேற்று கர்நாடகாவின் சிக்கமகளூரு தேவிரம்மா மலையில் அமைந்துள்ள தேவிரம்மா கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
21-10-2025 | 07:56
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரதான புல்தரை மைதானத்தில் சுற்றுலா பயணியர் இதமான காலநிலையை ரசித்தவாறு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
21-10-2025 | 07:53
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் இரவில் வெடிக்கப்பட்ட வண்ணமயமாக வாண வேடிக்கைகள்.இடம்: தங்க சாலை.
21-10-2025 | 05:29