இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உத்தரபிரதேசம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின், ஒரு ரயிலில் ஓட்டுநர் அறைக்கு சென்று லோகோ பைலட்டுகளுடன் ரயில் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.
09-11-2025 | 07:30
இளைஞர்களை நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியமர்த்தி பயிற்சி அளிக்கும் 'அக்னி வீர்' திட்டம் அமலில் உள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படுகிறது. உ.பி.,யின் வாரணாசியில் நடந்த அக்னி வீரர்கள் சேர்க்கை தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.
09-11-2025 | 07:22
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் 93வது விமானப்படை தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட நம்வீரர்கள், மூவர்ண கொடியின் வண்ணத்தை வானில் வரைந்து பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
09-11-2025 | 07:13
கடந்த இரண்டு மாதங்களாக, பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த டில்லி தேசிய உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவில் உள்ள குளத்தில் இரண்டு பெலிக்கன் பறவைகள் மீன்களை வேட்டையாடி பசி தீர்த்துக்கொண்டன.
09-11-2025 | 07:09
கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி சென்னை எழும்பூர் போர்டெல் ஹோட்டலில் 100 கிலோ எடையுள்ள பிளம் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் வைகை ஹோட்டல் குழுமம் இயக்குனர் சித்தார்த்.தினமலர் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா.
08-11-2025 | 18:05