உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பருவமழைக் காலம் துவங்கவுள்ள நிலையில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாராமல் கரைகள் முழுவதும் செடிகள் படர்ந்து ஓடைபோல் காட்சியளிக்கிறது.இடம் : நீலாங்கரை

26-11-2025 | 22:09


மேலும் இன்றைய போட்டோ

சில தினங்களாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு வனப்பகுதி பேயனாற்றில் நீர்வரத்துவங்கியுள்ளது.

26-11-2025 | 22:09


சென்னையில் குளிர்காலம் துவங்கியதால் போர்வை விபரம் சூடுபிடித்தது இடம் : ஒய்ட்ஸ் ரோடு ராயபேட்டை

26-11-2025 | 22:09


உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக சார்பில் மேட்டுப்பாளையத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.

26-11-2025 | 22:08


முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வழங்கினார்.

26-11-2025 | 12:19


காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வாணை சமேத முருகனுக்கு செண்பகம், சாமந்தி, வெற்றிலை, எலுமிச்சை மாலைகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

26-11-2025 | 10:23


ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி டேவிஸ் பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளதால், வண்ண மலர் செடிகள் இல்லாமலும், சுற்றுலா பயணிகள் வருகை இன்றியும், வெறிச்சோடி காணப்படுகிறது.

26-11-2025 | 10:18


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

26-11-2025 | 09:59


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், செவ்வாய் தரிசனத்திற்காக அதிக அளவில் குவிந்த பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

26-11-2025 | 09:06


ஜம்மு-காஷ்மீரில் கடுங்குளிர் காலம் துவங்கிவிட்டது. இதனால் மரங்களில் இலைகளுக்கு பதில் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன.

26-11-2025 | 08:28