இன்றைய போட்டோ
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உத்சவத்துடன் துவங்கியது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், தாயார் சன்னதி கோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
21-12-2025 | 06:23
மேலும் இன்றைய போட்டோ
கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
21-05-2026 | 22:49
சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.
21-05-2026 | 18:44
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
21-05-2026 | 18:43
வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.
21-05-2026 | 18:42
சென்னை கார்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்ட அமைச்சர் மரிய வில்சனுக்கு கவர்னர் அர்லோக்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் உடன் முதல்வர் விஜய்.
21-05-2026 | 18:41