உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இலைகளற்ற தன் மொட்டைக்கிளைகளை வெள்ளை அரிவாள் மூக்கன் என்ற பறவைகளுக்கு புகலிடமாக்கித் தந்துள்ளது. இந்த பட்டுப்போன மரம். இடம்: வெள்ளலூர் குளம், கோவை.

07-07-2026 | 07:16


மேலும் இன்றைய போட்டோ

ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் சிறுகளத்தூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் மீன் கழுவுகளை உண்ணும் காகங்கள்

06-07-2026 | 19:13


சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்

06-07-2026 | 19:12


போக்குவரத்து போலீசார் மெத்தனத்தால், பறிமுதல் வாகனங்கள் மீது செடி-கொடிகள் படர்ந்து, புதர்மண்டி காணப்படுகிறது. இடம்; திருவொற்றியூர்.

06-07-2026 | 19:06


செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாயில் இரை தேடிக்கொண்டிருக்கும் வாத்துக்கள். இடம்: சிறுகளத்தூர்

06-07-2026 | 19:05


சென்னையில் நிலவும் கடும் வெயிலால் வெப்பத்தை தாங்காமல் கடற்கரையில் தண்ணீரில் நனைந்து உடல் சூட்டை தணிக்கும் வாயில்லா ஜீவன்கள். இடம் : பெசன்ட் நகர்.

06-07-2026 | 19:04


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் வேகமாக வற்றிவருவதால் வலசை பறவைகள் உணவின்றி தவிக்கின்றன.

06-07-2026 | 19:04


திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளம் பகுதியில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது.

06-07-2026 | 19:03


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்.

06-07-2026 | 10:15


கடந்தாண்டு இதே நாளில் காவிரி நீர் ஆர்ப்பரித்து ஓட கல்லணை கடல் போல காட்சியளித்தது. இந்த ஆண்டு கர்நாடகாவும், பருவமழையும் கைவிட்டதால் வெறும் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வறண்டு காட்சியளிக்கும் கல்லணை.

05-07-2026 | 08:52