உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / அழகு / புருவமே... புதிய பாடல் பாடு!

புருவமே... புதிய பாடல் பாடு!

புருவம் குறைவாக இருக்கும், பருவப்பெண்களின் லேட்டஸ்ட் தேர்வு, 'மைக்ரோபிளேட்டிங்'.'செமி- பெர்மனென்ட் ஐப்ரோ டாட்டூயிங்' எனும் நவீன முறை பச்சைக்குத்துதான், மைக்ரோபிளேட்டிங்!இதில் சிறிய கையடக்க கருவியின் உதவியுடன், தோலில் மெல்லிய கீறல்கள் செய்யப்படுகின்றன. அந்த இடங்களில் நிறமிகள் (பிக்மென்ட்) செலுத்தப்படுவதால், புருவங்களுக்கு அடர்த்தியும், அழகான வடிவமும் கிடைக்கின்றன.'யாருக்கெல்லாம் இது பயன் தரும்?' -அழகாக புருவங்களை உயர்த்தியபடி, நம் கேள்வியை எதிர்கொள்கிறார், அழகுக்கலை நிபுணர் இலக்கியா.''புருவங்களில் முடி குறைவாக உள்ளவர்களுக்கும், மெல்லிய புருவங்களை கொண்டவர்களுக்கும் இது பெஸ்ட் சாய்ஸ். இயற்கையான, அடர்த்தியான புருவத் தோற்றம் பெற, இது ஒரு சிறந்த வழி. ஆனால், இது நிரந்தரமல்ல; சில மாதங்களில் மறைந்துவிடும்,''''தோலை கீறுவதில் ஆபத்து ஏதுமில்லையா?''''இந்த சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கருவி, தோலை கீறும் இயல்புடையதாக இருப்பதால், தோல் பாதிக்கப்படலாம். எனவே, நல்ல 'டெர்மடாலஜிஸ்ட்' ஆலோசனைப்படி, இதற்கென சான்றிதழ் பெற்ற நிபுணரை அணுகுவது சிறந்தது,”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை