வீட்டில் வில்வக்காய் வைக்கலாமா? | ஆன்மிகம் | Spirituality | Dinamalar
வீட்டில் வில்வக்காய் வைக்கலாமா? வில்வக்காய் அல்லது பழத்தை காயும் வரை வீட்டிலுள்ள பூஜையறையில் வைக்கலாம். இது வீட்டில் இருந்தால் கெட்ட நிகழ்வுகள் தள்ளி போடப்படும். தீராத நோய்கள் தீரும். மனதிலுள்ள அஞ்ஞானத்தை ஆசை முதலானவை ஒழித்து ஞானத்தை ஆன்மிக உணர்வு தரும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். சிவன் முன்பு வில்வ இலைகள் லட்சுமி முன்பு வில்வக்காய் வைத்து வணங்குவது செல்வச்செழிப்புக்கு வழி வகுக்கும்.
அக் 16, 2024