பெண் கிருஷ்ணா | ஆன்மிகம் | Spirituality | Dinamalar
பெண் கிருஷ்ணா வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த மகன் கிருஷ்ணர் என்பது அறிந்த விஷயம். கிருஷ்ணா என்ற பெயர் கொண்ட பெண்ணும் பூமியில் பிறந்தாள். அவள் தான் திரவுபதி. துருபதனின் மகள். துருபதன் கர்வம் மிக்கவன். அவனது கர்வத்தை அடக்க பாண்டவர்களின் குருவான துரோணர் முயற்சித்தார். பாண்டவர்கள் மூலம் அவனிடமிருந்து பாதிநாட்டை பிடுங்கி விட்டார். கோபமடைந்த துருபதன் துரோணரைக் கொல்லும் சக்தி வாய்ந்த மகன் ஒருவன் தனக்கு வேண்டும் என யாகம் செய்தான். யாக குண்டத்தில் இருந்து ஒரு ஆண் குழந்தை வெளிவந்தது. அவனது பெயர் திருஷ்டத்யும்னன். பாரதப்போரில் இவனே துரோணரைக் கொன்றான்.
அக் 17, 2024